கண்ணீரில் மிதக்கின்றது....
கண்மணிகள்.
கன்னங்கள் தாங்குகின்றது....
கண்ணீர்த்துளிகள்.
எண்ணங்கள் சுரக்கின்றது....
குரல்வளையில்.
என் மனம் துடிக்கிறது....
உந்தன் நினைவில்....!
இறைவன் படைத்தான்....
இதயம் ஒன்று - அது
யாருக்குச் சொந்தம்
புரியவில்லை இன்று
உலகறிந்த உண்மை எல்லாம்....
ஊமையாகிப் போனதிப்போ.
உனக்கும் எனக்கும் உள்ள உறவு
ஊனமாகிப் போனதிப்போ....!
பாசம் வைத்தாள்....
எந்தன் உயிரில் - அது
பட்டுப் போனது
ரோஜா செடிபோல்.
நேசம் வைத்த உறவு எல்லாம்....
வேசம்போட்டு பாடுதிப்போ.
நீயும் நானும் மலரும் நேரம்
ஜாதிமதம் தடுக்குதிப்போ....!
ஆணும் பெண்ணும்
ஜாதி இரண்டு - அது
ஆதாம் ஏவாள்
ஆட்சி அன்று.
காலம் கனிந்த கண்கள் எல்லாம்....
கருத்தை விரித்துப் பார்க்குதிப்போ.
காதல் செய்த பாவம் என்ன
கண்ணீர் மழை பொழியுதிப்போ....!
ஈழமகள் உங்கள் அபிசேகா.
சுற்றூலா
1 ஆண்டு முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக