ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

சனி, 19 டிசம்பர், 2009

உணர்வுகள் உணவின்றி தள்ளாட....


உணர்வுகள் உணவின்றி தள்ளாட...
உதிக்கும் சூரியன் நெருப்பாக...
உலகத்தமிழர் கைகள் எல்லாம்...
உதவி கேட்டு துடிக்கின்றது...

ஈழ மக்கள் விடிவிற்காய்...
தினமும் இதயம் அழுகின்றது.
உறவுகள் அங்கே உயிரின்றி...
உண்மைகள் இன்னும் உடையவில்லை.

காட்டுக்கும் மேட்டுக்கும் இடையில்.
காலையும் மாலையும் உறக்கம்.
நாட்டுக்கும் நாட்டுக்கும் இடையில்.
நல்ல அரசியல் வாதி உறக்கம்.

வீட்டுக்கும் வீதிக்கும் இடையில்.
ஆறடிக் குழிகள் அதிகம். - எம்
உறவுக்கும் எமக்கும் இடையில்.
ஓராயிரம் மைல்கல் அதிகம்.

தமிழர் கையில் இங்கு புலிக்கொடி.
ஈழத்தமிழர் கையில் அங்கு உயிர்க்கொடி.
தாயம் கண்டது தமிழ் வெறி - இனித்
தரணியை ஆழ்வது தமிழ் மொழி

கல்லறை கண்டது காவியம்.
காளைகள் சிதைத்தது ஓவியம்.
கருவறை கண்டது பாலின் நிறம்.
கலங்கியே போனது சேயின் நிறம்.

இருகை கூப்ப இறைவன் இல்லை .
மறுபடி பேச வார்த்தை இல்லை
ஒருபடி உயர உதவி இல்லை.
ஒருமித்து வாழ வழியும் இல்லை.

ஈழமகள் உங்கள் அபிசேகா.

0 கருத்துகள்:

Related Posts with Thumbnails