ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

திங்கள், 28 டிசம்பர், 2009

நீ ஒரு வீரனடா...!



தோழா...... தோழா..... நீ.....
தோற்கவில்லையடா தோழா.
தமிழா....... தமிழா...... நீ.....
தண்ணீர் மட்டுமா பருகிறாய் தமிழா.
வீரா...... வீரா........ எம்.....
விடுதலைக்காய் உண்ணா நோம்பா.


ஆசைகள் அதிகம் இருந்தாலும் - தமிழ்
ஆணவம் உன்னைச் சுற்றியதோ......
உன்னையே உனக்குப் புரியவில்லை
உலகமும் விழித்துப் பார்த்ததில்லை
மானத் தமிழன் பொழிகின்றான் கண்ணீர்.


நாளை மலரும் பருவம் எல்லாம்
நச்சுக் குண்டில் அழிகிறதே......
நாட்டை விட்டுச் சென்றாலும்
உன் நினைவலைகள் அங்கே.
உன் நின்மதி கெடுகிறது இங்கே


நாளுக்கு நாள் பத்திரிகை பேசுகிறது.
நாட்டுக்கு நாடு என்மினம் உண்ணா நிலை.
நாடி நரம்புகள் தளருது இங்கே
நால்வர் சேர்ந்து தூக்க நாதியில்லை அங்கே
நடைப் பிணமாய் நாம் இங்கு


தாய் மண்ணில் தவளாவிட்டாலும்
தான் இருக்குமிடத்தில்......
தமிழுக்கு ஓர் சிறப்பு தந்தது பா வரிகள்.
தமிழுக்காய் உன் உயிர்.
தரை இறங்கும் நேரமல்ல நண்பா.


தியாகி திலீபனை இழந்த வேதனை
இன்னும் தீரவில்லை......
அன்னை பூபதி மறைந்த வேதனை
இன்னும் ஆறவில்லை. எம்
நெஞ்சில் இன்னொரு காயம்
ஏற்படுத்தாதே சோதரா......!!!




ஈழமகள் உங்கள் அபிசேகா.

0 கருத்துகள்:

Related Posts with Thumbnails