முடியுமென நினைத்தால்
மூலதனம் தேவையில்லை....!
முன்னேற்றம் கண்பது
உறுதி என்றால்....
முடிவிற்கு எல்லையே இல்லை...!!
நினைத்தனைச் சாதிப்பவள்...!
நேர்மையை விரும்புபவள்...!
ஆசைகள் அதிகம் இருந்தாலும் - தமிழ் ஆணவம் உன்னைச் சுற்றியதோ...... உன்னையே உனக்குப் புரியவில்லை உலகமும் விழித்துப் பார்த்ததில்லை மானத் தமிழன் பொழிகின்றான் கண்ணீர்.
நாளை மலரும் பருவம் எல்லாம் நச்சுக் குண்டில் அழிகிறதே...... நாட்டை விட்டுச் சென்றாலும் உன் நினைவலைகள் அங்கே. உன் நின்மதி கெடுகிறது இங்கே
நாளுக்கு நாள் பத்திரிகை பேசுகிறது. நாட்டுக்கு நாடு என்மினம் உண்ணா நிலை. நாடி நரம்புகள் தளருது இங்கே நால்வர் சேர்ந்து தூக்க நாதியில்லை அங்கே நடைப் பிணமாய் நாம் இங்கு
தாய் மண்ணில் தவளாவிட்டாலும் தான் இருக்குமிடத்தில்...... தமிழுக்கு ஓர் சிறப்பு தந்தது பா வரிகள். தமிழுக்காய் உன் உயிர். தரை இறங்கும் நேரமல்ல நண்பா.
தியாகி திலீபனை இழந்த வேதனை இன்னும் தீரவில்லை...... அன்னை பூபதி மறைந்த வேதனை இன்னும் ஆறவில்லை. எம் நெஞ்சில் இன்னொரு காயம் ஏற்படுத்தாதே சோதரா......!!!
0 கருத்துகள்:
கருத்துரையிடுக