ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

இளங்கவித் தென்றலின் பிறந்த தினமாம்..!!!


பனி விழும் பங்குனியில் - உன்
பாதம் பட்டது பாரினில்.
ஐந்தில் கற்ற அறிவை.......
அழியா வண்ணம் இன்றுவரை.!!!

அறுபத்திநான்கு கலையும்..
உனக்கே சொந்தமடி.- ஆனால்
நீ... மட்டும் எமக்குச் சொந்தமடி.!
உலகம் உன்னைப் போற்ற..
ஊரார் உன்னை வாழ்த்த..
உனக்குப் புரியும்
பிறப்பின் அர்த்தமடி.!!!

கவிதனை விழியால் வரைந்து
கலையென எண்ணி
அபிநயம் பிடித்துப்பார்.
அகிலமே உன் காலடியில்.!!!

செந்தமிழ் சேலையில்..
பைந்தமிழ் பாதையில்..
முத்தமிழ் மூளையில்..
முடிச்சு போட்டது பா வரிகளில்.!!!

இளங்கவித் தென்றலே.!
ஈழம் ஒரு நாள் உன்னை அழைக்கும்.
இனிய தமிழ் அங்கே ஒலிக்கும்
உன் அண்ணன் கையால் பரிசு கிடைக்கும்.!!!

வண்ண ஓவியம் வரைந்து.
வார்த்தையும் சேர்த்து புனைந்து
வாசலிலே கோலமாய் மாட்டிவிடு.
வசந்த மாளிகை ஆகிவிடும் உன் வீடு.!!!

மாதா... பிதா... உன் அருகில்.
தம்பி... தங்கை... உன் வழியில்.
அக்கா(மார்)...அத்தான்(மார்)... உன் விழியில்.
அனைத்து உறவுகளும்... உன் பிடியில்.!!!

கற்பனை கலந்த உலகம் - இதில்
நற்றம் காண்பது கடினம்.
விற்பனை கலந்த வழ்க்கை - இதில்
வெற்றி நடை போடுவது கடினம்.

கற்றது கரையாமல்....
கல்லாதாரை கனிய
வைப்பது உன் கடமை.!
வந்த புகழ் அழியாமல்
வளப்படுத்துதல் உன் கடமை.!
கதைகளுக்குள் நீ புகுந்து - திரைக்
கதையாய் மாற்றிவிடு - அதைக்
கண்டு களிப்பது....எம் கடமை.!

உ.........ன்............னா........ல்..
முடியும் என நினைத்தால்..
முலதனம் தேவையில்லை.
முன்னேற்றம் காண்பது
உறுதி என்றால்...
முடிவிற்கு எல்லையே இல்லை..!!!


ஈழ‌ம‌க‌ள் உங்க‌ள் அபிசேகா.

0 கருத்துகள்:

Related Posts with Thumbnails