ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

வெள்ளி, 18 டிசம்பர், 2009

முதல் முறை சந்தித்தல்...!

தேவதையா......! நீ.. ஒரு தேவதையா..!
தேவதையா......! அவள் ஒரு தேவதையா..!
என் விரல்கள் பட்டால்.....
சிலித்திடும் உன் அங்கம்.
கண்கள் நோக்க....
இமைகள் பேச....
புன்னகை தவழுது செவ்விதழில்.
தேவதையா......! நீ.. ஒரு தேவதையா..!
தேவதையா......! அவள் ஒரு தேவதையா..!

முதல் முறை காலடி வைத்தவளே..!
என்னிதயத்தில் இடம்பிடித்தாய்.
உனக்கென நானும்.....
எனக்கென நீயும்.....
உயிர் மூச்சில் இணைந்து விட்டோம்.
ஒரு நாள் வாழ்ந்தாலும்
உன்னுடன் வாழ்வது உறுதி.
ஓரக்கண்ணால் பார்க்காதே...
ஓதியதெல்லாம் மந்திரம்.
மந்திரம் இது மந்திரம்
தந்திரம் இல்லை மந்திரம்.

முதல் முறை உன் நாமம்..!
என்னிதயத்தில் பதித்துவிட்டாய்.
என்னையே உனக்கு.....
உன்னையே எனக்கு.....
இறைவன் இணைத்துவிட்டான்.
ஒருநாள் வாழ்ந்தேன் கற்பனையில்.
ஒன்பது குழந்தை என்னருகில்.
கோபத்தோடு பார்க்காதே...
வெட்கம் எனக்கு வந்துவிடும்.
மந்திரம் இது மந்திரம்
தந்திரம் இல்லை மந்திரம்.

முதல் முறை ஒரு பாடல்..!
உனக்காய் புனைந்துள்ளேன்
முறைப்படப் சங்கீதம்......
முடப்க்கவில்லை உன் ஜீவன்.....
அங்கும் இங்கும் சேர்த்த வரிகள் இங்கே.
ஒருநாள் பார்த்தேன் உன் விழிகள்...
உருவம் அமைத்தேன் என் விழியில்.
சிலையைப் போல உன் மேனி.
செதுக்கிய கலைமான் இன்றெங்கே..........?
மந்திரம் இது மந்திரம்
தந்திரம் இல்லை மந்திரம்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.






0 கருத்துகள்:

Related Posts with Thumbnails