ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

ஞாயிறு, 20 டிசம்பர், 2009

வீசியது கடும் புயற்காற்று.....


தமிழீழத்தில் ஓர் தென்றல்
திசை மாறி வீசியது.....
அது நீ பிறந்த போது...!
தமிழீழத்தில் மற்றுமோர் தென்றல்
திசை தெரிந்து வீசியது.....
அது நீ தவண்ட போது...!

தமிழீழத்தில் சில்லென
வீசியது காற்று.....
அது நீ படிக்கும் போது...!
தமிழீழத்தில் மெல்லப்
படந்தது பருவக்காற்று.....
அது நீ பருவமடைந்த போது...!

தமிழீழத்தில் ஆங்காங்கே
வருடியது வாடைக்காற்று.....
அது நீ சாதனை புரிந்த போது...!
தமிழீழத்தில் திசை தெரியாது
வீசியது கடும் புயற்காற்று.....
அது நீ செல்லடித்து சாகும் போது...!

புயற்காற்றே நீ.......... எப்போது
தென்றலாய் மாறுவாய்.............?
தென்றலே நீ............ எப்போது
எம் தேசத்தை தாளாட்டுவாய்....?
தேசமே நீ............. எப்போது
எம் தமிழினத்தை சீராட்டுவாய்...?
பாராட்டுவாய்....? தாளாட்டுவாய்...?


ஈழமகள் உங்கள் அபிசேகா.

0 கருத்துகள்:

Related Posts with Thumbnails