ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

சனி, 2 ஜனவரி, 2010

தாயில்லாப் பிள்ளை நானம்மா...!



அம்மா...!
உன்
மரணச் செய்தி என்
மனசைத்
துளைத்த நொடி ....


கண்கள் ஊமையாயின.
காதுகள் குருடாயின‌.
வாய் செவிடானது.


பல்லிடுக்கில்
சிக்கிய நாக்குக்குப்
பைத்தியம் பிடித்தது.


என்னைப்
புறந்தள்ளிவிட்டுப்
புறப்பட்டுப் போனது
பூமிப் பந்து .


இருளைக் கிழித்த‌
ஒளியைப் பிளந்து
எழுந்து நடந்தது
இருள்.


தானாக
வானாக‌
நீ ஆக
சரிகின்ற
தூணாக
நானாக
ஆனேன் அம்மா!


சு.செந்தில் குமரன்

0 கருத்துகள்:

Related Posts with Thumbnails