ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

சனி, 2 ஜனவரி, 2010

நெஞ்சே... நெஞ்சே....நீ... பேசயோ..!


நெஞ்சே... நெஞ்சே....நீ... பேசயோ.
என்னை விட்டு....நீ... போறாயோ.
பாதி உயிர் என்னை விட்டு போன‌தம்மா....
மீதி உயிர் சாவை நோக்கி போகுதம்மா....
காதலிலே தோல்வி கண்ட பொம்மையம்மா....
கடைசியிலே கல்லறைதான் சொந்தமம்மா....


பள்ளியறை நினைவுகள்
கண்ணில் வந்து போகுதம்மா.
சுற்றித் திரிந்த மரம் செடிகள்
சோலை வனம் ஆன‌தம்மா.
விட்டுப் போன நம் காதல்
செத்துப் போனால் சேருமம்மா.
சொர்க்கத்தில்.....சேருமம்மா....!


சின்னச் சின்ன வேதனைகள்
சேந்து என்னைக் கொள்ளுதம்மா.
சேர்த்து வைத்த காகிதங்கள்
சோக கீதம் பாடுதம்மா.
பட்டுப் போனது நம் காதல்ச்செடி
விட்டுப் போனது ரோஜாச் செடியம்மா
பூத்த ரோஜாச் செடியம்மா......!


சாதம் ஊட்டிய உன் கைகள்
எனைப் பார்த்துக் கேள்வி கேட்டதம்மா.
அர்த்தமில்லா வார்த்தை என்று
அமைதியாய் உனைப்பார்த்து ரசித்தேனம்மா.
ஆயிரம் ஆயிரம் கனவுகள்
அத்தனையும் உடைந்து போனதம்மா
சுக்கு நூறாய்ப் போனதம்மா.


ஏதோ ஒன்று அவள் மனதை
ஆழமாய்ப் போட்டுக் குழப்புதம்மா.
துரத்தித் துரத்துக் காதலித்தவள்
தூணைப் பார்த்து புலம்புகிறாளமமா.
என் காதலை மறுத்த அவள் உறவு
செய்வினை போட்டு மாற்றிவிட்டார்களம்மா.
எம் காதல் தேவதையைக் கொன்றுவிட்டார்களம்மா.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

0 கருத்துகள்:

Related Posts with Thumbnails