ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

செவ்வாய், 26 ஜனவரி, 2010

வீரனுக்கு அழகு இதுவல்ல...



தாயிற்கு ஒரு பிள்ளை ஆனாய் - ஏன்
ஆமியில் போய்ச் சேர்ந்தாய்.
நாட்டைக் காப்பது...
வீரனுக்கு அழகு.


ஆனால் எம் தேசத்தை அழிப்பது
உனக்கு அழகல்ல புகழல்ல...
ஈழத்தை அழிக்க முயன்றால்...
அழிவது நாமல்ல நீயல்லோ...


வீரத்தைக்.....
காட்டவில்லை போரில்.
வீழ்ந்த ஆமியைத்.....
தூக்கவில்லை உன் கரத்தில்.


எட்டப்பன்.....
கூட்டத்தின் கூற்றில்.
எடுத்து வைத்த பாதம்...
சரிந்தது இன்று ஏட்டில்.


அப்பாவி மக்களைச்.....
சுட்டுத்தள்ளினாய் நேரில்.
அறியாத பாவைகளை.....
அம்மணமாக்கினாய் சாவில்.


அத்தனையும் செய்துவிட்டு.....
தள்ளிவிட்டாய் புதைகுழியில்.
இதைப் பார்த்து உயர்பதவி.....
கிடைத்தது உன் கையில்.


மதம் கொண்ட யானைக்கும்....
வெறி கொண்ட சிம்மத்திற்கும்....
தேர்தலில் போட்டியா....? இல்லை
சாவதில் போட்டியா... புரியவில்லை.


ஈழமகள் உங்கள் அபிசேகா.















0 கருத்துகள்:

Related Posts with Thumbnails