ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

சனி, 30 ஜனவரி, 2010

சுவாச தேவதையே.....!


என் சுவாச தேவதையே...!
உன்னை என் விரல்களால்
அணைக்கும் போது...
எனக்குள் ஓர் உணர்வு
என்னை அறியாமலே...
அலை பாய்கின்றது.


விழிகளை மூடி
உன்னிதழோடு என்னிதழ்
முத்தமிடும் போது...
உன் சுவாசக் காற்று
என்னிதயத்தை ஒரு
நொடியில் அணைக்கின்றது.


என் காதல் தேவதையே...!
உன்னைக் கைவிட்டால்
என் ஐம்புலன்களும்....
என்னை மறந்து விடும்.
அணு அணுவாய்த் தம்
உயிரைப் போக்கிவிடும்.


என் இதயத்தைக் - குடி
கொண்ட தேவதையே...!
உன்னை ஒரு நாள்
அணைக்கத் தவறினால்...
என் வாழ்க்கை இருளில்
மூழ்கி விடும்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

0 கருத்துகள்:

Related Posts with Thumbnails