ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

சனி, 16 ஜனவரி, 2010

எனக்குள் ஒருத்தியாய் நினைத்தேன்....!


பார்த்தேன்.....
ஒரு தரம் பார்த்தேன்.
கேட்டேன்.....
அவள் குரல் கேட்டேன்....!


ரசித்தேன்.....
தனிமையை ரசித்தேன்.
நினைத்தேன்.....
எனக்குள் ஒருத்தியாய் நினைத்தேன்....!


காதல்...
இதயத்தைச் சுற்றுகிறதே.....
நானும்...
உலகத்தை சுற்றுகிறேனே...!


காதல் என்னும் மூச்சு.....
காற்றோடு கலந்து
உன்னைத் தேடுகின்றதே...!


வானமே.....
நீ பார்த்தாயா.....?
வண்ணத்துப்பூச்சியே.....
நீ பார்த்தாயா.....?


மின்னலே.....
நீ பார்த்தாயா.....?
மின்மினிப்பூச்சியே.....
நீ பார்த்தாயா.....?


நீயும் பார்ககவில்லை.....
நானும் பார்ககவில்லை.....
யார் தான் பார்த்தார்கள்
என் தேவதையை...!!!


கண்கள்.....
உன்வரவைத் தேடுகிறதே....
காலம்.....
என்னை விட்டுப் போகிறதே....!


காதல் என்னும் கவிமழை
கண்ணீறோடு கலந்து
உன்னைத் தேடுகின்றதே...!


கண்கள்.....
கண்டது உண்மையா.....?
காதல் .....
வென்றது உண்மையா.....?


உன் மூச்சு.....
என்னில் பட்டது உண்மையா.....?
என் பேச்சு.....
நின்று போனது உண்மையா.....?


நீயும் ஏதோ பார்க்கிறாய்.....
நானும் ஏதோ பார்க்கிறேன்.....
யார் தான் பார்த்தாலும்
நம் காதல் நிறைவேரும்....!!!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

2 கருத்துகள்:

Pinnai Ilavazhuthi சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
Pinnai Ilavazhuthi சொன்னது…

//காதல் என்னும் கவிமழை
கண்ணீறோடு கலந்து
உன்னைத் தேடுகின்றதே...//
நல்ல படைப்பு.... வாழ்த்துக்கள் தோழி

Related Posts with Thumbnails