ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

சனி, 16 ஜனவரி, 2010

யார் இவ‌ள் என் விழியில்...!



வளையல் சத்தம்...
கேட்ட போது.
திரும்பிப் பார்த்தேன்.
அழகி ஒருத்தி..._ என்னை
அழைத்த விதத்தை
வியந்து பார்த்தேன்.


வழி தவறி வந்த பார்வையா...?
என்னை வாழ வைக்க வந்த பாவையா...?
திசை மாறிப் போகும் என் கால்க‌ள்.
பசை போட்டு ஒட்டிவிட்டால் ஒரு நெடியில்.
யார் இவ‌ள் என் விழியில்...
யார் இவ‌ள் என் வழியில்...!


தேன் மொழியில் வ‌ரும் வார்த்தை
தென்ற‌லால் ம‌ய‌ங்கி கேட்க‌வில்லை என் செவியில்.
உன் உத‌டுக‌ளால் உலாவும் அசைவுக‌ள்.
உத‌ய‌மாகி உல‌கையே குளிர‌ வைக்கின்ற‌து என் எதிரில்.
யார் இவ‌ள் என் வ‌லையில்...
யார் இவ‌ள் என் க‌தையில்...!




தெய்வ‌த்தின் அருளோடு... பூமிக்கு வ‌ந்த‌வ‌ள் இவ‌ளோ.
தேச‌த்தில் யார் க‌ண்ணும்... ப‌டாத‌ பூம‌க‌ள் இவ‌ளோ.
சாவிற்கு அடி எடுத்த என் கால்க‌ள்.
ச‌ற்றுத் தாம‌தித்த‌து... இவ‌ள் வ‌ருகை கண்டோ.
யார் இவ‌ள் என் விதியில்...
யார் இவ‌ள் என் ம‌தியில்...!


ஈழமகள் உங்க‌ள் அபிசேகா.



0 கருத்துகள்:

Related Posts with Thumbnails