ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

கண்ணீரைத் தாங்குமா - இதயம்


கண்ணீரைத் தாங்குமா - இதயம்
கண்ணீரைத் தாங்குமா.
விண்மீன்கள் சிரிக்கிறது - உலகே
வேடிக்கை பார்க்கிறது.


தமிழ் மண்ணின் மணம்
மறந்து போனதம்மா...
எம் உதிரத்தின் மணம்
எம்மில் வீசுதம்மா....!


சோலைவனம் எங்கள் தேசம்
பாலைவனம் ஆனதிப்போ...
பாசவனம் எங்கள் வாசம்
சுடுகாடாய்ப் போனதிப்போ...!


தந்தை தாயின் உறவு
சொல்லப் பிள்ளை இல்லையம்மா...
பிள்ளை உள்ள வீட்டில்
சொந்தம் எதுவும் இல்லையம்மா....!


தென்றல்வீசும் எங்கள் தேசம்
சோகமயம் ஆனதிப்போ...
செந்தமிழ் எங்கள் வேதம்
செவ்வினால் எம்முயிர் போகுமிப்போ...!


கடற்கரைக் காற்றில் வரும்
பேரின்பம் இன்றில்லையம்மா...
கல்லுரிகள் கண்ட கனவு
கரைந்து புதைகுழியில் போனதம்மா....!


நீதி மறவா எங்கள் தேசம்
நேர்மையில்லா சிங்கள அரசு ஆளுதிப்போ...
சாதி.. மதம் ஒன்றே எங்கள் தேசம்
பௌத்த மதமாய் மாறுதிப்போ...!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

0 கருத்துகள்:

Related Posts with Thumbnails