ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

ஞாயிறு, 3 ஜனவரி, 2010

கண்கள் கண்டதால் காதல் வந்தது பெண்ணே....!


உன்னையும் என்னையும்
படைத்தவன் இறைவன்....
அவனுக்கு எங்கே
போனது இதயம்....!


உன்னையும் என்னையும்
இணைப்பவன் எவனோ....
அவனுக்கு கொடுப்பேன்
என் இதயம்....!


விழிகளால் கவிதைகள்
கூறும் பெண்ணே....
வியப்பிலே மயங்கிப்
போனேன் கண்ணே....!


வார்த்தைகள் ஒன்றும்
வரவில்லைக் பெண்ணே....
உன்னைப் பார்த்ததும்
ஊமையாகிப் போனேன் கண்ணே....!


உன் மனம்
என்னோடு பேசுது பெண்ணே....
உனக்குப் புரியவில்லையா
என் காதல் கண்ணே....!


உன் அழகைக் கண்ட
பின் தான் பெண்ணே....
இந்த உலகம் அழகாய்த்
தெரிகின்றது கண்ணே....!


உன் சுவாசக்காற்றில்
வாழ விரும்புகின்றேன் பெண்ணே....
என்னை உன் உயிராய்
ஏற்றுக் கொள்வாயா கண்ணே....!


பாதையில் பார்த்த உறவு
பாசமாய்ப் போகவேண்டும் பெண்ணே....
பயணமாய்த் தொடரும் இரவு
பந்தமாய்ப் போகவேண்டும் கண்ணே....!


நீ... இல்லா நிணைவு
எனக்கு நரகம் பெண்ணே....
நீ... இல்லா வாழ்க்கை
எனக்கு மரணம் கண்ணே....!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

2 கருத்துகள்:

ஆர்வா சொன்னது…

ம்ம்ம்ம்.. கலக்குங்க

கமலேஷ் சொன்னது…

மிகவும் நன்றாக இருக்கிறது...
வாழ்த்துக்கள்..

Related Posts with Thumbnails