ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

சனி, 2 ஜனவரி, 2010

காத‌லுக்கு வ‌ந்த‌ சோத‌னை...


போதுமடா...
உந்தன் குரல்.
பூமியிலே எதிரொலிக்க....!


வேணுமடா...
உந்தன் உயிர்.
எனக்குள்ளே உறவளிக்க....!


உன் கண்ணுக்குள்ளே...
என் விம்பம் கலைந்து போனது.
கவிதை வரியாய்....!


என் நெஞ்சுக்குள்ளே...
உன் காத‌ல் க‌சிந்து போன‌து.
க‌ற்பின் வ‌ழியாய்....!


உன் உத‌டுக‌ள்...
குவிவ‌தே.
என் பெய‌ர் சொல்லவே....!


உன் கால்க‌ள்...
போகும் திசை.
என் காதலும் போகிற‌தே....!


வ‌ழி...
ம‌றித்து.
இத‌ய‌த்தைக் கொடுத்தேனே....!


விழி...
ம‌றித்து.
என் காத‌லை ஏற்றுக்கொண்டாயே....!


கைக‌ள்...
க‌ண்ட‌ சுக‌ம்.
க‌டைசிவ‌ரை நீடிக்க‌ வில்லையே....!


காத‌லுக்கு வ‌ந்த‌ சோத‌னை...
கையால் போட்ட‌ கோல‌மாய்.
மாறிய‌து தான் வேத‌னையே....!


காத‌ல் தொட‌ர் க‌தையாய்...
மாறினால்.
சுவைக்க‌லாமே ர‌சிக்க‌லாமே....!


காத‌ல் த‌டைக‌ளாய்...
மாறிய‌தால்.
எம்மால் தான் சுவாசிக்க‌ முடியுமோ....!
இந்த‌ பூமியில் வாழ‌த்தான் முடியுமோ....!


காதலுக்கு கை கொடு ந‌ண்பா...
காத‌லைப் பிரிப்ப‌த‌ற்கு.
முக‌ம் கொடாதே....!


ஈழ‌ம‌க‌ள் உங்க‌ள் அபிசேகா.

















1 கருத்துகள்:

sarvan சொன்னது…

காதலே அழகு! காதல் கவிதை ரொம்ப அழகு!

Related Posts with Thumbnails