ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

என் இதயம் .... வலிக்கிறதே....!

என் உயிரே.... என் உயிரே...
என் இதயம்.... அழுகிறதே...!
என் உறவே.... என் உறவே...
என் இதயம் ....வலிக்கிறதே...!


வாழ்க்கை என்னும் கோபுரத்துள்
வாசல் வரை சென்றிருந்தேன்.
வழிமறித்து இன் ஒருத்தி
வல்லமையால் சென்றுவிட்டால்.


தூங்கும் கண்கள்...
கண்ணீரில் மிதக்கின்றது.
பேசும் நியங்கள்...
மெளனமாய் அழுகின்றது.


உத‌டுக‌ள் இருந்தும்...
உண்மைக‌ள் இருந்த‌தில்லை.
உண‌ர்வுக‌ள் இருந்தும்...
உள்ள‌ம் சாக‌ விரும்ப‌வில்லை.


தேன் நில‌விற்கு செல்ல‌ இருந்த‌ வாழ்க்கை.
தேன் கூட்டில் சென்று விட்ட‌து.
யார் க‌ண் ப‌ட்ட‌தோ....
புண் ப‌ட்டுப் போன‌து என் ம‌ன‌ம்.


சாவிற்கு வ‌ழி தேடுகிறேன்.
சாட்சிக‌ள் இல்லாம‌ல்...
நேர்மைக்கு வ‌ழி தேடுகின்றேன்
வ‌ஞ்ச‌னைக‌ள் இல்லாம‌ல்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.







2 கருத்துகள்:

கவி அழகன் சொன்னது…

நல்ல கவிதை இலங்கையில் இருந்து யாதவன்

ஈழமகள் சொன்னது…

நன்றி யாதவன்.
உங்கள் கருத்திற்கும்...
வருகைக்கும்.

Related Posts with Thumbnails