ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

வியாழன், 11 பிப்ரவரி, 2010

விழிகளில்...பாதை அமைத்தேன்.

என் விழிகளில்...
பாதை அமைத்தேன்
உன் வருகைக்காக.
இமைகள் மூடிக்...
காத்திருந்தேன்
உன் அன்புக்காக.


இருளிலே...
உன் பார்வை
நிலவைப் போலே
நிரந்தரமாய்...
தங்கிவிடு என்
இதயத்துள்ளே


நிழலிலே...
உந்தன் உருவம்
சிலையைப் போலே.
நீ... சொல்லிவிட்டாய்...
உந்தன் காதல்
என் மனசைப் போலே.


தரணியே...
தடுமாறுது...
உந்தன் வரவைக்கண்டு.
தடுத்து...
நிறுத்தவேண்டும்
உன்மேல் வைத்த கண்களை இன்று.


ஈழமகள் உங்கள் அபிசேகா.



1 கருத்துகள்:

ஆர்வா சொன்னது…

FEELINGSSSSSSSSSSSS

Related Posts with Thumbnails