ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

சனி, 6 பிப்ரவரி, 2010

காமத்தின் எல்லை வரை..........


என் சிகையில்...
உன் முகம் சிக்கிவிட...
உணர்வலைகள் உயிர் பெற்றுவிடும்.
உதடுகளின் ஈரம்
கண்பார்வை மேல் விழ...
மறு ஜென்மம் மலர்ந்து விடும்...!!


ஆணுக்கும் பெண்ணுக்கும் அடிமையறை
படுக்கை அறை தான்.
பந்த பாசம் பார்வையில்...
பட்ட இன்பம் போர்வையில்...
தெய்வீக வாசனை அவன் வியர்வையில்...
தென்றலாய் மாறியது அவள் மேனியில்...!!


இருட்டில் முகம் நடமாட...
படுக்கும் முறை நிலை தடுமாற...
மூச்சோடு மூச்சு பேசி விளையாட...
முளைத்தது மூன்றாம் பிறை.
வரம்புக்கு மீறிய ஆசை.
வந்தது கட்டிலில் ஓசை...!!


கண் மூடிக் கண்ட சுகங்கள்...
கை கால் கண்ட நியங்கள்...
காலத்தால் அழியாத நினைவுகள்.
கையணை தலையணையாய் மாறிவிட...
தலையணை தடங்களாய் மாறிவிடும்.
உடலும் உயிரும் உலாவுமிடத்தில்.
உடைகள் தடைகளாய் மாறிவிடும்...!!


பெண் உள்ளம் பேசிவிட...
ஆண் உள்ளம் மௌனமாகிவிடும்.
இது தான் தலையணை மந்திரமா...?
தவிக்க முடியாத யந்திரமா...?
அவள் மார்புக்கு மத்தியில்...
புதைக்கப் பட்ட அவன் முகம்
பூரிப்படைந்த காட்சி - என்
கண்கள் மட்டும் தான் சாட்சி...!!


நாவால் நனைந்த உன் மேனி...
மூச்சுக் காற்றால் உலர்ந்து போனாய் நீ...
பதுமையாய் வளர்த்த பற்கள்...
பௌவியமாய் கடித்த...
சிவந்த கன்னங்கள்.
சில் என்று ஏறிய உணர்வுகள்...
சீறியது இன்பத் துளிகளாய்...!!


தடைகளை உடைத்து வந்த...
சுகந்திரப் புறாவாய்...
அடைக்கலமாய்த் தாவியது நெஞ்சறையில்.
இதயத் துடிப்பின் ஓசை...
இளமைப் பருவத்தின் ஆசை...
இரண்டும் பொக்குள் கொடி உறவுகள்...!!


காதோரம் கதை கேட்க...
காத்திருந்தேன் சில நாட்கள். - என்
பூவோடு விளையாட...
பூ முடிந்திருந்தேன் சடையோடு.
தேனோடு உறவாட...
தேர்ச்சி பெற்றேன் உன்னோடு.
மானோடு விளையாட...
மாட்சிமை பெற்றேன் தாயாக.
சீறோடு வளப்பேன்....
சிந்தனையில் சிதறாமல்...!!!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

2 கருத்துகள்:

அண்ணாமலையான் சொன்னது…

நல்லாருக்கு....

ஈழமகள் சொன்னது…

நன்றி அண்ணா.

Related Posts with Thumbnails