ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

ஞாயிறு, 27 ஜூன், 2010

அச்சம் இல்லை எமக்கு... இனி அதிர்ச்சி உண்டு சிங்கள அரசே...!

பணத்தையும்.. புகழையும்....
சேர்ப்பதற்காய்....
இரவு பகலாய்ப் தமிழினத்தைக்
கொன்று குவித்தார்கள்
பல அரக்கர் படைகள்.


மண்ணையும்... மானத்தையும்
காப்பாற்றுவதற்காய்....
இரவு பகலாய் கண்விழித்து...
களமிறங்கிப் போராடினார்கள்
எம் மறவர் படைகள்.


அன்று நடந்தது என்ன....?
பல நாட்டு உதவியுடன்
விளையும் எம் மண்ணில்....
எம் குருதியால் சிவந்தமண்ணாய்ப்
போனது தான்....
நாம் கண்ட நினைவலைகளா...?


இல்லை... இல்லை....
நாம் ஏமாறவில்லை.
அன்று நடந்தது எமக்கு ஒரு
படிப்பினை தான்
இன்று நடக்கப் போவது....
பல நாட்டிற்குக் கொடுக்கும்
அர்ச்சனை தான்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

சனி, 19 ஜூன், 2010

கலைஞரை மன்னிக்காதே....!

இரு நா...
படைத்த.
கலைஞரை...
மன்னிக்காதே....!


தமிழினம் இரத்தக்கடலில்
மீழ்கிய போது....!
மூன்று மணி நேர
உண்ணா நோன்பு யாருக்காய்.....?


பத்திரிகைக்காரனுக்காய்...
தொலைக்காட்டி பார்ப்பவருக்காய்...
உன் உடலில் ஏற்றப்பட்ட
கொழுப்பைக் குறைப்பதற்காய்...!


இதுவும் ஒரு
நாடகமேடைதான்...
அதை மானமுள்ள ஈழத்தமிழர்...
நாம் மறவோம்...!


உன் குலத்திற்கு....
உரிமை சேர்க்கும் போது.
சோனியாவின் காலையும் பிடிப்பாய்.
செறி நாய்களின் வாலையும் பிடிப்பாய்...!


இது தான்
அரசியலின் தந்திரமா....?
உன் அரியனையின்
இரகசிய மந்திரமா...?


மானம் கெட்ட
மனிதயினத்துடன் வளர்ந்தவனே...!
மாசு அறியாத
மானிடரைக் கொன்றவனே...!


கலாச்சாரத்தை பற்றி...
நீ... பேசாதே...!
செந்தமிழைப் பற்றி...
நீ... உரையாதே...!


இரண்டுற்கும் அருகதை...
அற்றவன் நீ...!
உனக்கு யார் தந்தது
கலைஞர் பட்டமடா...!


ஓ.... பணத்தைக்...
கொடுத்து வாங்கினாயா....?
தமிழரின் பிணத்தை...
புதைத்து வாங்கினாயா...?


ஒரு வீட்டில்...
இழவு விழுந்தால்.
மறுவீட்டில்...
நல்லது ஏதும் நடவாது.
இது தான் தமிழீழம்...!


ஒரு நாட்டில்...
இழவு விழுந்தால்.
அயல் நாட்டில்...
நல்லது ஏதும் நடவாது.
அது தான் அன்றைய பாரத தேசம்...!


இன்று ஈழத்தில் இழவு
விழுந்துகொண்டு இருக்கின்றது.
அயல் நாடுகள் அமைதியாய்
வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றது...!


இது தான்...
உலக நியதியா....?
அயல் நாட்டின்
இரகசியக் கோரிக்கையா....?


உலகத்தமிழ்த்...
தலைவன் என்று.
சொல்லும் அருகதை...
உனக்கில்லை கலைஞரே...!


உலகத் தமிழரைக்...
கொன்று குவிக்க.
உடந்தையாய் இருந்தேன் என்று...
உன் வாயால் சொல்லு கலைஞரே....!


நீ பிறந்த போது...
உவகையடைந்த உன் அன்னை.
உயிரோடு இன்று இருந்திருந்தால்...
உன் சதிகளைப் பார்த்து...!


புன்னகையில்...
பூரிப்படைந்திருப்பாளா...?
வேதனையில்...
வெட்கப்பட்டிருப்பாளா...?


அன்றும் இன்றும் என்றும்....
எமக்கென்று ஒரு தலைவன்.
அவனே உலகத்...
தமிழருக்கும் தலைவன்...!


இதயத்தில் ஒரிடம்....
இவனுக்காய்.
ஒதுக்கப்பட்டு....
பல ஆண்டுகள் ஆகின்றது.


இவனின்...
செம்மையான ஆட்சியினை.
உலகமே...
ஒரு நாள் போற்றும்...!


மறவர்...
படை என்றால்.
மானமும்... வீரமும்...
சேர்ந்த படையாகும்...!


நல்லிரவில்...
நானல்ல நீயல்ல.
பே... கூட பயணம் செய்யும்....
தமிழீழத்தின் வீதிகளால்...!


இனியாவது நம்ம கரிகாலனை
மனதார ஏற்றுக்கொள்ளுங்கள்
அயல் நாட்டு...
அன்புத்தமிழ் உறவுகளே....!!!


ஈழமகள் உங்கள் அபிசேகா.
Related Posts with Thumbnails