ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

ஞாயிறு, 27 ஜூன், 2010

அச்சம் இல்லை எமக்கு... இனி அதிர்ச்சி உண்டு சிங்கள அரசே...!

பணத்தையும்.. புகழையும்....
சேர்ப்பதற்காய்....
இரவு பகலாய்ப் தமிழினத்தைக்
கொன்று குவித்தார்கள்
பல அரக்கர் படைகள்.


மண்ணையும்... மானத்தையும்
காப்பாற்றுவதற்காய்....
இரவு பகலாய் கண்விழித்து...
களமிறங்கிப் போராடினார்கள்
எம் மறவர் படைகள்.


அன்று நடந்தது என்ன....?
பல நாட்டு உதவியுடன்
விளையும் எம் மண்ணில்....
எம் குருதியால் சிவந்தமண்ணாய்ப்
போனது தான்....
நாம் கண்ட நினைவலைகளா...?


இல்லை... இல்லை....
நாம் ஏமாறவில்லை.
அன்று நடந்தது எமக்கு ஒரு
படிப்பினை தான்
இன்று நடக்கப் போவது....
பல நாட்டிற்குக் கொடுக்கும்
அர்ச்சனை தான்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

0 கருத்துகள்:

Related Posts with Thumbnails