ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

சனி, 24 ஜூலை, 2010

இது எங்கள்...தேசமா...?

இது எங்கள்...
தேசமா...?
இது எங்கள்...
வாசமா...?


இளம் தென்னங்...
கீற்றுக்கள்.
இனி உரத்தைக்...
காணுமா...?


கருவில்
இருந்த போது....
கனிந்த
கனவுகள்.


கருவறை விட்டு...
வெளிவரும் போது.
கலங்கிப் போனது...
தாயின் நினைவுகள்.


இயற்கை அழிவில் என்...
இதயம் போனது.
செயற்கை அழிவில் என்...
சேயும் போனது.


அடர்ந்த காடு
எமது கூடு.
அலைந்த எம்மை
அழைத்த வீடு.


பசியைப் தீர்க்கப்
படுத்து உறங்கு.
பலனை அடைய
குரங்கை நாடு.


வலியைப் போக்க
அமைதி தேடு.
வசந்தம் வீச
வாசல் தேடு.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

0 கருத்துகள்:

Related Posts with Thumbnails