ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...
கவலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 3 ஜூலை, 2015

நாளை யார் முகவரியோ...?

அன்று கிரிஷாந்தி... தர்சினி...
இன்று வித்தியா...
நாளை யார் முகவரியோ...?
நாமறியோம்....!

தமிழராய்ப் பிறந்தது குற்றமா...?
தமிழ்ப்பால் குடித்தது குற்றமா...?
தமிழ் மண்ணில் வளர்ந்தது குற்றமா...?
தன்மானம்  எம்மில் வீசியது குற்றமா...?
தலை சிறக்கப் படித்தது குற்றமா...?
தலை நிமிர்ந்து வாழ்வது  குற்றமா...?

இலங்கை அரசே...!
சற்றுத் திரும்பிப்பார்...
சிந்தித்துப்பார்....!
அன்று பள்ளியில்...
ஆரம்பித்தது முதல் போராட்டம்.
இன்று பள்ளியில்....
ஆரம்பிக்க வேண்டுமா....
அதே போராட்டம்....?

சிட்டாய்ப் பறக்கும் பருவத்தில்....
சிந்தனையை சேமிக்கும் வயதில்....
சிறகுடைத்து... சிதைத்து விட்டானே...!
சீர்கெட்ட பாதகன் யாரவன்...???

நீதிக்கும் முன் நிறுத்து...
நியாயத்தின் பாதையில்...
இழுத்துச்செல்...!
இனி ஒரு இழப்பை...
தமிழினம் சந்திக்காமல்....
இருக்க வேண்டுமென்றால்...
கொடுத்து விடு
குற்றவாளிக்கு மரணதண்டனை.

காம வெறியாட்டக்காரர்களே....!
காயப்படுத்தாதீர்கள் தமிழினத்தை.
தட்டிக் கேட்க  யாருமில்லையென...
தப்புக்கணக்குப் போடாதீர்கள்.

நாட்டுக்கு நாடு...
தமிழரின் வளர்ச்சி...
சாதனையாய்  திகழ்கின்றது.
வேதனையில் ஈழ சிறார்களை...
வீழ்த்த நினைத்தால் ...
கண்டம் விட்டு கண்டம் பாயும்
ஏவுகணை போல்....
எம் யுத்தம் ஆரம்பமாகும்.


ஈழமகள் உங்கள் அபிஷேகா

சனி, 6 மார்ச், 2010

சுயநினைவு அற்ற பள்ளிப்பருவம்


அம்மா நீ எங்கே....?
உன் பிள்ளை இங்கே...
தலைவிரி கோலமாய்...
தனைமறந்து வாழ்கின்றாள்.
தாயே நீ எங்கே....? இவளை
தவிக்கவிட்டுச் சென்றாய்.


ஊர் இருண்டு போனாலும்....
உன் மகள்விழி உறங்கவில்லை.
ஏதோ நினைவுகள்....
ஏதோ எண்ணங்கள்....
தோன்றி மறையுது
அவள் உள்ளத்தில்.


இரவும்... பகலும்....
இவளுக்கு நிகர்தானா....?
இறைவன்... கொடுத்த...
வரம்தான் இதுதானா....?


உறவைக் கூடதெரியவில்லை.
உள்ளுடுப்புத் தெரிவதைப் புரியவில்லை
படிக்கும் போது பரிசுகள் பெற்றபிள்ளை.
அரக்கர்படையால் கெடுத்த போது...
தொலைந்து போனது எதிர்காலம்
மறைந்து போனது இவள் எண்ணம்.


விதியா....சதியா....?
இவள் ஒரு தமிழிச்சியா....?
இதுதான்.... குறையா....?
தமிழுக்கு வந்த கதியா....?


ஈழமகள் உங்கள் அபிசேகா.

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

என்ன பாவம் செய்தேன்....

நெஞ்சிலே....
அன்பின் ஏக்கம்.
தொலைவிலே....
தாய்தந்தை இல்லம்.


என் கரத்திலே தாங்குமா.
தம்பிமாரின் பாரம்.
கல்லாய்ப் போனது...
கபடமில்லா என் இதயம்.


அன்னை மடி சூடு...
அறியவில்லை நாங்கள்
அன்னை போனபின்னே...
அநாதையானோம் நாங்கள்.


அன்பு காட்டி ஊட்டி விட்டால்
அன்னை போல் ஆகுமா....?
அள்ளி அணைத்து முத்தமிட்டால்
தந்தை போல் ஆகுமா....?


பத்து வயது கூடியிருந்தால்....
பத்துப் பாத்திரமாவது துலக்கியிருப்பேன்
பிஞ்சுக் கரத்தால்
பிச்சை கூட எடுக்க முடியவில்லையே...!


என்ன பாவம் செய்தேன்....
என் தாய்தந்தையை இழப்பதற்கு.
தமிழீழத்தில் பிறந்தது குற்றமா...?
தமிழ்ப்பால் குடித்தது குற்றமா....?


அஞ்சி அஞ்சி வாழ்கின்றோம்
மின் கம்பிகள் ஊடே.
அலட்சியமாய்ப் பார்க்கின்றதே
வெளியுறவு நாடே.


நான் மட்டும்
அநாதையல்ல...
உறவென்று சொல்ல
இரு உள்ளங்கள் என்னருகே...!


அது கூட இல்லாமால்....
பேசும் மழலை மொழியும்
பேச உறவின்றி
அநாதையாய் அழுகின்றது.


ஈழமகள் உங்கள் அபிசேகா.
Related Posts with Thumbnails