ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 20 மார்ச், 2010

அன்னமே...

அன்னமே...
உன் பார்வை
கொள்ளை கொண்டதே
என்னையே.


செல்லமே...
உன் மழலை
தென்றலாய் என்
நெஞ்சிலே.


வானமே...
உன்னைத் தாலாட்ட
ஆனந்தமாய் கண்
மூடிக்கொள்.


முத்து முத்தாய்
முத்தம் - நீ...
முகத்தில் தந்தாய்
நித்தம்.


தித்திக்க தித்திக்க...
நீ... பேச
கன்னக்குழி இரண்டும்
கதைகள் பல பேசும்.


சொன்ன சொல்லை...
மீண்டும் நீ சொல்ல
உன் கண்கள் கூட
கவி பாடும்.


பஞ்சு போன்ற பாதத்தில்...
தஞ்சம் கேட்டு ஓடி வந்து
தாயின் மடிப்புகுந்து
சிரிப்பாய்.


தங்க நிலவே...
இன்று போல் என்றும் நீ
தேன் சிந்து
என் வாழ்க்கையில்...!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

சனி, 20 பிப்ரவரி, 2010

காதலுக்கு ஜாதி என்ன...?


உன் சோக வரிகளில்
மூழ்கிவிட்ட நண்பிகளில்...
நானும் ஒருத்தி....!


உன் சோக‌த்தின் பாதியைக்
கொடுத்து விடு...
ந‌ல் ந‌ண்ப‌ரிட‌ம்.....!


உன‌க்காய்....
ஒரு நிமிட‌ம்
மெள‌ன‌ம்.


க‌ட‌வுளிட‌ம்...
மண்டியிட்டுக்
கேட்கின்றேன்.


எத‌ற்காய்ப்...
ப‌டைத்தாய்
காத‌ல் வ‌ரிக‌ளை.....!


க‌ல‌ங்க‌ம் இல்லாக் காத‌ல்...
காத்திருக்கும்
சாகும் வரை.....!


காதலுக்கு...
ஜாதி என்ன
மதம் என்ன...?


உன் காதலுக்கு...
முள்வேலி போட்டு
விட்டால் காதலி.


காத்திருக்கும்
உம் உறவுகள்
உயிரோடு வாழ்வதற்காய்...!


நீ செய்வது யாகமா...?
அவள் செய்வது தியாகமா...?
உம் உறவுகள் செய்வது நியாயமா...?


பதில் தேடி...
நாமும் அலைகிறோம்...
விடை கொடு நண்பரே....!


ஈழமகள் உங்கள் அபிசேகா.



சனி, 16 ஜனவரி, 2010

விதைக்கப் பட்ட உள்ளங்கள்....!




ஆயிரம் கண்கள் பார்வையிலே.
உந்தன் உயிர்கள் போகையிலே.
கண்ணீர் தரையில் ஓடுகையில்.
ஓவென்று அழும் சத்தம் - எம்
நெஞ்சைப் பிளக்கிறதே...!


நாட்டின் நலத்தை
நாம் அறியவில்லை.
நால்வர் சேர்ந்து தூக்கும் போது
நாடே போற்றுதே............!


வீட்டுக்கொருவர் கேட்ட போது
வீரம் வரவில்லையே.
வீதி வழியே சாகும் போது
விரக்தி வரவில்லையே...!


காட்டிக் கொடுக்கும் பகைவர் கூட்டம்
நாட்டில் நிரம்பி வழியுதே.
கடல் கடந்து கொண்டுவந்த
ஏவுகணையை கையாள முடியவில்லையே...!


காலதேவன் வந்த போது
கைகள் சோரவில்லையே.
கடல் அன்னை துணை கொண்டு
களமிறங்கி தோல்வி அடையவில்லையே...!


தனை மாய்த்து எமைக் காத்த
புலிவீரர் இவ்வுலகில் இல்லையே.
புதுயுகம் படைக்கப்...
புறப்பட்ட வீரர் நாமில்லையே...!


அது நானில்லையே......
அது நாமில்லையே.....
அது யார் பிள்ளையோ.....
யார் முல்லையோ......!!!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

புதன், 6 ஜனவரி, 2010

நீ...வந்தால் கிடைத்திடும் தமிழீழமே...!


உனைப் போல் ஒருவன்
இருந்தால் உலகம்
ச‌தியில் இருந்து விடுப‌டும்.
எனைப் போல் பலரும்
இருந்தால் தேசம்
இருளில் இருந்து விடுபடும்.


பார்த்தாயா... எங்கள் மண்ணின் வாசம்.
கேட்டாயா... எங்கள் அழுகைச் சத்தம்
தினமும் நினைக்கிறோம் உன்னையே.
நீ...வந்தால் கிடைத்திடும் தமிழீழமே


ஆலைய மணியின் ஓசை
அங்கு கேற்பது கூட இல்லை.
செல் அடியின் ஓசை
அதனால் காதுகள் கேற்பது இல்லை.


ஆயிரம் ஆயிரம் வேங்கைகள்
மா...வீரர் ஆனது ஈழ‌மண்ணில்.
ஆயிரம் ஆயிரம் உறவுகள்
சாம்பலாய்ப் போனது வன்னிமண்ணில்.


காட்டிக்கொடுக்கும் கூட்டம்...
புலிகள் பேரைக் கேட்டால் நடுக்கம்.
காலை மாலை தூக்கம் இல்லை...
கனவிலும் வருகிது கரும்புலித் தொல்லை.


மீன் பிடித்தொழிலும் இல்லை...
மீறிப் போனால் திரும்பி வருவதுமில்லை
காய்கறிக் கடையும் இல்லை...
கடைசியில் பிச்சை எடுக்கப் பாத்திரமுமில்லை.


ஈழமகள் உங்கள் அபிசேகா.
Related Posts with Thumbnails