Loading...
சனி, 20 பிப்ரவரி, 2010
காதலுக்கு ஜாதி என்ன...?
உன் சோக வரிகளில்
மூழ்கிவிட்ட நண்பிகளில்...
நானும் ஒருத்தி....!
உன் சோகத்தின் பாதியைக்
கொடுத்து விடு...
நல் நண்பரிடம்.....!
உனக்காய்....
ஒரு நிமிடம்
மெளனம்.
கடவுளிடம்...
மண்டியிட்டுக்
கேட்கின்றேன்.
எதற்காய்ப்...
படைத்தாய்
காதல் வரிகளை.....!
கலங்கம் இல்லாக் காதல்...
காத்திருக்கும்
சாகும் வரை.....!
காதலுக்கு...
ஜாதி என்ன
மதம் என்ன...?
உன் காதலுக்கு...
முள்வேலி போட்டு
விட்டால் காதலி.
காத்திருக்கும்
உம் உறவுகள்
உயிரோடு வாழ்வதற்காய்...!
நீ செய்வது யாகமா...?
அவள் செய்வது தியாகமா...?
உம் உறவுகள் செய்வது நியாயமா...?
பதில் தேடி...
நாமும் அலைகிறோம்...
விடை கொடு நண்பரே....!
ஈழமகள் உங்கள் அபிசேகா.


0 கருத்துகள்:
கருத்துரையிடுக