ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

கல்லறை தான் உன் வீடா...?

தாய் மண் மடியில்....
தலை சாயும் மகளே.
நீ.... பெற்ற சேயும்....
துயில் கொள்ளுது பாராயோ..!


ஊரையும்.... பேரையும்....
அழிக்கும் அகிலம்.
உன் சாதனையைப்
அறிய...வில்லையே...!


நெஞ்சினில் பாரம்
கண்களில் தோன்றும்.
உன்னைப் பார்த்ததும்
கண்ணீராய் ஓடுதே...!


கனவெல்லாம்...
உன் மகவு.
கானல் நீராய்ப்...
போனது என் நினைவே...!


நான் புலம்பிய வார்த்தைகள்
உன் காதுகள் எட்டுமே...!
கல்லறை தான் உன் வீடா...?
என் கருவறைக்கு வந்து சேராயோ...!


ஈழமகள் உங்கள் அபிசேகா.
Related Posts with Thumbnails