ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

சனி, 8 மே, 2010

வாழ்க்கையில் ஏதடா நின்மதி...!

எம்மிடம் விட்டு இடம் வந்ததால்.
வாழ்க்கை என்ன இனிக்குமா...?
வாழ்ந்து தான் ஆகவேண்டும்.
எம் உறவுகளுக்காயல்லவா....!


நீதி கேட்டுக்...
கிடைக்கவில்லை.
நிதி சொஞ்சம் அனுப்பினால்.
நிறைந்துவிடும் பசியல்லவா....!


ருசி பார்த்துப்...
புசித்த நா.
பசிவரும் போது
மலம் கூடத் தின்றதல்லவா...!


குறிபார்த்த வம்சம்...
கூட்டி அள்ளியது
எம்மவர்....
எலும்பித் துண்டல்லவா....!


குறிதவறக் காரணம்...
கூடயிருந்து குழி பறித்த
கூலிப்படைக்...
கைக்கூலிகள் அல்லவா....!


கருணா ஒரு புறம்...
கருணாநிதி மறு புறம்.
வாழ்க்கையில் ஏதடா நின்மதி.
விளங்குமா உந்தன் சந்ததி....!


ஈழமகள் உங்கள் அபிசேகா.
Related Posts with Thumbnails