ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

சனி, 13 ஏப்ரல், 2013

பெண்ணே எழு நீ இடியாக...



பெண்ணே எழு நீ இடியாக...
உன் கனவு கனியும் நியமாக...
பூவே எழு நீ புலியாக...
உன் வீரம் ஏட்டில் பதிவாக...!

சிறைகள் உனக்குப் புதிரல்ல....
வதைகள் உனக்குப்  புதிதல்ல...
தடைகள் உனக்கு பொருட்டல்ல...
அதை வெல்லும் வலிமை
அடி பெண்ணே உனக்கல்லோ....!

பெண்ணே எழு நீ புயலாக....
உன் மௌனம் பேசும் இடியாக....
கண்ணே எழு நீ கதிராக...
உன் அடிமை அழியும் நியமாக...!

சதிகள் உனக்கு தொடரல்ல...
விதிகள் உனக்கு விடையல்ல....
மானம் காக்கும் பெண்ணே....
மடியும் பகைவர் கூட்டம்....
உன் கண் முன்னே.....!

ஈழமகள் உங்கள் அபிசேகா.

Related Posts with Thumbnails