ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

சனி, 18 டிசம்பர், 2010

கார்த்திகைப் பூக்கள்....!


கார்த்திகை மாதம்...
கார்த்திகைப் பூக்கள்....
கைகளில் ஏந்தி...
மா... வீரர்களின்
கல்லறை செல்வோம்.


கண்களிலே கண்ணீர்...
கரைகிறது.
தாயின் கருவறையும்....
துடிக்கிறது.


பெண்களிலே வீரம்...
சுரக்கிறது.
தமிழீழத்திலே வீரம்
விளைகிறது.


மறவர்படையாய்....நாம்
மாறப்போகிறோம்.
விடுதலைத் தாகத்திலே...
வெற்றிக் களமாடப்போகிறோம்.


இனி வரும் வம்சம்...
கல்லறை கண்ட
காவியர்கள் தந்த வழிதனை...
கலக்கமில்லாமல் காத்திடவேண்டும்.
பாதுகாத்திட வேண்டும்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.









வியாழன், 12 ஆகஸ்ட், 2010

கைகொடுத்து உதவும் கனடா...!

பிறந்து ஒரு இடம்.
வளர்ந்தது பல இடம்.
படித்தது ஒரு சில இடம்
பசியால் துடித்தது பல இடம்.
பயத்தால் பதுங்கியது பல பல இடம்.


வாழ்க்கையை இழந்தோம்
வருமானத்தை இழந்தோம்.
மண்ணின் காதலை இழந்தோம்
கன்னியின் கற்பை இழந்தோம்.


சொந்த உறவுகளை இழந்தோம்
சொத்துப் பத்துக்களை இழந்தோம்.
அவயவங்களை இழந்தோம்
அநாதையாய்.... அகதியாய் அலைந்தோம்.


சிங்கள அரசின்...
பார்வையில் சிக்கினோம்
மின் கம்பி முகாமிற்குள்...
வதை பட்டோம்.


தூங்கிய நாட்கள் அரிது.
துயரத்தில் ஆழ்ந்த நாட்கள் அதிகம்.
விசாரனை இல்லா நாட்கள் அரிது.
விடிந்தால் கானாமல் போகும் ஆட்கள் அதிகம்.


ஆறடிக் குழி...
நமக்குத் தேவையில்லை....
ஆறும்... குளமும்...
எம்மைத் தாங்கும் நிலை


இறக்கும் போது...
சுகந்திரம் இல்லை
இறந்த பின் கூட...
எம் நினைவுகள் வெளிவருவதில்லை.


கை கட்டி கால் கட்டி...
கண் கட்டி வாய் கட்டி.
அகோரமான சாவல்லவா...
தமிழராகிய நமக்கு.


கவலைகளைத் தாண்டி வருகின்றோம்...
கடல் கடந்து கனடா.
கனவுகளைச் சுமந்து வருகின்றோம்...
கைகொடுத்து உதவு கனடா.


உயிரைக் கையில் ஏந்திவருகின்றோம்
எம் உணர்வை மதித்து.
உயிர்ப் பிச்சை போட்டால்...
நாம் உயிரோடு வாழ்வோம்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

ஞாயிறு, 25 ஜூலை, 2010

கனத்த நாள் கருப்பு யூலை...!

கருப்பு யூலை....அன்று
கனத்த நாள்.
கருப்பு யூலை....இன்று
கண்ணீர் கசிந்த நாள்.
கருப்பு யூலை...என்றும்
கரிய நாள்...!

நினைவுகள் எம்மோடு...
நிலைத்து நிற்கின்றது.
எம் உறவுகள்....
இவ்வுலகை விட்டு - 27
ஆண்டுகள் ஆகின்றது.
தாங்குமா... எம்மிதயம்
தூங்குமா.... எம்மீழம்.!

சிறி என்ற சின்னத்தை
தாரிலே கொதிக்கவைத்து
மார்பிலே அச்சிட்டதை...
மறக்கத் தான் முடியுமா....
ஈழத்துப் பூவைகள் நாம்.!

காடையர் கஞ்சா...அபின்..
குடித்துவிட்டு.
காமத்தின் வேகத்தை...
மிருகத்தனமாய்க் கையாண்டதை
மறக்கத் தான் முடியுமா....
ஈழத்துப் பாவைகள் நாம்.!

திருகோணமலை நகரில்...
செல்வநாயகபுரத்தில்...
ரயர்களுக்கு மத்தியில்...
செட்டியார் என்ற வயதானவரை
உயிருடன் கொழுத்தியதை...
மறக்கத் தான் முடியுமா
ஈழத்துத் தமிழர் நாம்.!

கொழும்பு மா நகரில்...
கொழுத்தும் வெய்யிலில்...
வேலை விட்டு வந்தவர்களை
வீடு புகுந்து கண்டம் துண்டமாய்...
வெட்டிச் சரித்ததை
மறக்கத் தான் முடியுமா...
உலகத் தமிழர் நாம்.!

வெலிக்கடைச் சிறைக்குள்...
சிக்கப்பட்ட அப்பாவித் தமிழர்
சித்திரவதை என்ற போர்வையில்
சிந்திய இரத்தைக்கரை
வதைச்சுவரில் இன்றும்..
காவியமாய்த் திகழ்கின்றதை...
மறக்கத் தாம் முடியுமா...
ஒவ்வொரு மானத்தமிழனும்.!

ஈழமகள் உங்கள் அபிசேகா.

சனி, 24 ஜூலை, 2010

இது எங்கள்...தேசமா...?

இது எங்கள்...
தேசமா...?
இது எங்கள்...
வாசமா...?


இளம் தென்னங்...
கீற்றுக்கள்.
இனி உரத்தைக்...
காணுமா...?


கருவில்
இருந்த போது....
கனிந்த
கனவுகள்.


கருவறை விட்டு...
வெளிவரும் போது.
கலங்கிப் போனது...
தாயின் நினைவுகள்.


இயற்கை அழிவில் என்...
இதயம் போனது.
செயற்கை அழிவில் என்...
சேயும் போனது.


அடர்ந்த காடு
எமது கூடு.
அலைந்த எம்மை
அழைத்த வீடு.


பசியைப் தீர்க்கப்
படுத்து உறங்கு.
பலனை அடைய
குரங்கை நாடு.


வலியைப் போக்க
அமைதி தேடு.
வசந்தம் வீச
வாசல் தேடு.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

வெள்ளி, 23 ஜூலை, 2010

vidai kodu angal nadee... விடை கொடு எங்கள் நாடே... :(

செவ்வாய், 20 ஜூலை, 2010

அனுவின் ஓராண்டு நினைவலைகள்.....!

ஓராண்டு காலம் கடந்ததடா...
உன் நினைவுகள்
எம் நெஞ்சில் பதிந்ததடா...!


காலதேவன் கனவு பழித்ததடா...
உன் வரவு காணாது
எம் விழி துடித்ததடா...!


தலைமகனாய்...
தடம் பதித்தாய்.
தங்கமகனாய்...
துளிர் விரித்தாய்.


தாய் தந்தை - எம்
உறவைத் தரிசித்தாய்.
உன் உடன்பிறப்பை...
அன்பால் அரவணைத்தாய்.


அனு என்ற உன் நாமம்
அணையாது ஏழேழு ஜென்மம்.
அமைதியாய் வாழ்ந்த எம் இல்லம்
அனுக்குட்டி நீ.... இல்லாது ஏதடா இன்பம்.


அன்புத் தெய்வமே...
அந்தி வானம் கூட
உன் இழப்பைத் தாங்காது
கண்ணீர்த் துளிகளாய்ப் பொழிகிறது.


பத்துத் திங்கள் - நீ
பத்திரமாய்க் கருவறையில்.
பார்த்துப் பார்த்துப் பூரிப்படைந்தது
எம் இதயக் கனவுகள்.


பத்தொன்பது வயதில் - உன்னைப்
பார்த்தோமே கல்லறையில்.
பாதி உயிர் உன்னோடு போனது
மீதி உயிர் நடைப் பிணம் ஆனது.


அன்னை என் பிறந்த தினமன்று
கட்டி அணைத்துச் சென்ற நீ...
தந்த பரிசு உன் உயிரோ...
தங்கத் தலைமகனே...!


இனிவரும் - என்
பிறந்த தினம் எல்லாம்
இடிந்து நொருங்கப் போகின்றது
என் இதயம் அல்லவா....?


இளமையில் - பல
கனவுகள் சுமந்திருப்பாய்.
இன்பமாய் - அதில்
நனைந்திருப்பாய்.


துன்பமாய்ப் போகும் - என
எமக்குத் தோன்றவில்லையே.
துன்னலர் உன்னைத் தாக்கும் போது
துப்புக்கூட யாரும் தரவில்லையே.


பிரமன் எழுதிய விதியா...!
பழகிய நண்பர் செய்த சதியா...!
விழிகளில் பதிந்த உன் நினைவுகள்
விலகாது....என்றும் அணையாது.


எம் குலத்தின் குலவிளக்கே...
உன் ஆத்மா சாந்தியடைய
உனக்காய்த் தினமும் உருகி வேண்டும்
உன் உறவுகள் உடன் பிறப்புக்கள்...!!!


நன்றி
ரஞ்சிதா இந்திரகுமார்
------------------------------------------------
(ஈழமகள் உங்கள் அபிசேகா.)

ஞாயிறு, 11 ஜூலை, 2010

தாய் மடியில்...........

தாய் மடியில்....
தலை சாயும்.
தலைமகனே
நீ.... எங்கே...?


கண்களிலே....
நீர் சுமக்கும்.
தாய் இங்கே
பார்.... மகனே....!


உறவிருந்தும்....
மகிழ்வில்லை.
நினைவிருந்தும்
உன்... உயிரில்லை....!


உணவிருந்தும்....
ருசி இல்லை.
உன் நினைவால்
பசி.... இல்லை....!


பார்க்கும் இடமெல்லாம்....
உன் உருவம்.
நிழலாய் தோன்றி
மறைகின்றதே....!


யார் செய்த பாவம்....
என் வீட்டில் சோகம்.
நீ.... இல்லா வாசம்
நிகர்.... இல்லை சொந்தம்....!


உலகம் போற்றும்....
பிரமனே.
என் சேயைப்
பிரிக்க.... வந்தாயோ....!


பால் கொடுத்த....
முலைகள் இரண்டும்.
பதறித் துடிக்கிறது
நீ.... பாராயோ....!


கருவறை உனக்காய்....
காத்திருக்கும் - நான்
கல்லறை போகமுன்.
வா..... மகனே.....வா....!


ஈழமகள் உங்கள் அபிசேகா.





ஞாயிறு, 27 ஜூன், 2010

அச்சம் இல்லை எமக்கு... இனி அதிர்ச்சி உண்டு சிங்கள அரசே...!

பணத்தையும்.. புகழையும்....
சேர்ப்பதற்காய்....
இரவு பகலாய்ப் தமிழினத்தைக்
கொன்று குவித்தார்கள்
பல அரக்கர் படைகள்.


மண்ணையும்... மானத்தையும்
காப்பாற்றுவதற்காய்....
இரவு பகலாய் கண்விழித்து...
களமிறங்கிப் போராடினார்கள்
எம் மறவர் படைகள்.


அன்று நடந்தது என்ன....?
பல நாட்டு உதவியுடன்
விளையும் எம் மண்ணில்....
எம் குருதியால் சிவந்தமண்ணாய்ப்
போனது தான்....
நாம் கண்ட நினைவலைகளா...?


இல்லை... இல்லை....
நாம் ஏமாறவில்லை.
அன்று நடந்தது எமக்கு ஒரு
படிப்பினை தான்
இன்று நடக்கப் போவது....
பல நாட்டிற்குக் கொடுக்கும்
அர்ச்சனை தான்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

சனி, 19 ஜூன், 2010

கலைஞரை மன்னிக்காதே....!

இரு நா...
படைத்த.
கலைஞரை...
மன்னிக்காதே....!


தமிழினம் இரத்தக்கடலில்
மீழ்கிய போது....!
மூன்று மணி நேர
உண்ணா நோன்பு யாருக்காய்.....?


பத்திரிகைக்காரனுக்காய்...
தொலைக்காட்டி பார்ப்பவருக்காய்...
உன் உடலில் ஏற்றப்பட்ட
கொழுப்பைக் குறைப்பதற்காய்...!


இதுவும் ஒரு
நாடகமேடைதான்...
அதை மானமுள்ள ஈழத்தமிழர்...
நாம் மறவோம்...!


உன் குலத்திற்கு....
உரிமை சேர்க்கும் போது.
சோனியாவின் காலையும் பிடிப்பாய்.
செறி நாய்களின் வாலையும் பிடிப்பாய்...!


இது தான்
அரசியலின் தந்திரமா....?
உன் அரியனையின்
இரகசிய மந்திரமா...?


மானம் கெட்ட
மனிதயினத்துடன் வளர்ந்தவனே...!
மாசு அறியாத
மானிடரைக் கொன்றவனே...!


கலாச்சாரத்தை பற்றி...
நீ... பேசாதே...!
செந்தமிழைப் பற்றி...
நீ... உரையாதே...!


இரண்டுற்கும் அருகதை...
அற்றவன் நீ...!
உனக்கு யார் தந்தது
கலைஞர் பட்டமடா...!


ஓ.... பணத்தைக்...
கொடுத்து வாங்கினாயா....?
தமிழரின் பிணத்தை...
புதைத்து வாங்கினாயா...?


ஒரு வீட்டில்...
இழவு விழுந்தால்.
மறுவீட்டில்...
நல்லது ஏதும் நடவாது.
இது தான் தமிழீழம்...!


ஒரு நாட்டில்...
இழவு விழுந்தால்.
அயல் நாட்டில்...
நல்லது ஏதும் நடவாது.
அது தான் அன்றைய பாரத தேசம்...!


இன்று ஈழத்தில் இழவு
விழுந்துகொண்டு இருக்கின்றது.
அயல் நாடுகள் அமைதியாய்
வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்கின்றது...!


இது தான்...
உலக நியதியா....?
அயல் நாட்டின்
இரகசியக் கோரிக்கையா....?


உலகத்தமிழ்த்...
தலைவன் என்று.
சொல்லும் அருகதை...
உனக்கில்லை கலைஞரே...!


உலகத் தமிழரைக்...
கொன்று குவிக்க.
உடந்தையாய் இருந்தேன் என்று...
உன் வாயால் சொல்லு கலைஞரே....!


நீ பிறந்த போது...
உவகையடைந்த உன் அன்னை.
உயிரோடு இன்று இருந்திருந்தால்...
உன் சதிகளைப் பார்த்து...!


புன்னகையில்...
பூரிப்படைந்திருப்பாளா...?
வேதனையில்...
வெட்கப்பட்டிருப்பாளா...?


அன்றும் இன்றும் என்றும்....
எமக்கென்று ஒரு தலைவன்.
அவனே உலகத்...
தமிழருக்கும் தலைவன்...!


இதயத்தில் ஒரிடம்....
இவனுக்காய்.
ஒதுக்கப்பட்டு....
பல ஆண்டுகள் ஆகின்றது.


இவனின்...
செம்மையான ஆட்சியினை.
உலகமே...
ஒரு நாள் போற்றும்...!


மறவர்...
படை என்றால்.
மானமும்... வீரமும்...
சேர்ந்த படையாகும்...!


நல்லிரவில்...
நானல்ல நீயல்ல.
பே... கூட பயணம் செய்யும்....
தமிழீழத்தின் வீதிகளால்...!


இனியாவது நம்ம கரிகாலனை
மனதார ஏற்றுக்கொள்ளுங்கள்
அயல் நாட்டு...
அன்புத்தமிழ் உறவுகளே....!!!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

சனி, 8 மே, 2010

வாழ்க்கையில் ஏதடா நின்மதி...!

எம்மிடம் விட்டு இடம் வந்ததால்.
வாழ்க்கை என்ன இனிக்குமா...?
வாழ்ந்து தான் ஆகவேண்டும்.
எம் உறவுகளுக்காயல்லவா....!


நீதி கேட்டுக்...
கிடைக்கவில்லை.
நிதி சொஞ்சம் அனுப்பினால்.
நிறைந்துவிடும் பசியல்லவா....!


ருசி பார்த்துப்...
புசித்த நா.
பசிவரும் போது
மலம் கூடத் தின்றதல்லவா...!


குறிபார்த்த வம்சம்...
கூட்டி அள்ளியது
எம்மவர்....
எலும்பித் துண்டல்லவா....!


குறிதவறக் காரணம்...
கூடயிருந்து குழி பறித்த
கூலிப்படைக்...
கைக்கூலிகள் அல்லவா....!


கருணா ஒரு புறம்...
கருணாநிதி மறு புறம்.
வாழ்க்கையில் ஏதடா நின்மதி.
விளங்குமா உந்தன் சந்ததி....!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

ஞாயிறு, 18 ஏப்ரல், 2010

கல்லறை தான் உன் வீடா...?

தாய் மண் மடியில்....
தலை சாயும் மகளே.
நீ.... பெற்ற சேயும்....
துயில் கொள்ளுது பாராயோ..!


ஊரையும்.... பேரையும்....
அழிக்கும் அகிலம்.
உன் சாதனையைப்
அறிய...வில்லையே...!


நெஞ்சினில் பாரம்
கண்களில் தோன்றும்.
உன்னைப் பார்த்ததும்
கண்ணீராய் ஓடுதே...!


கனவெல்லாம்...
உன் மகவு.
கானல் நீராய்ப்...
போனது என் நினைவே...!


நான் புலம்பிய வார்த்தைகள்
உன் காதுகள் எட்டுமே...!
கல்லறை தான் உன் வீடா...?
என் கருவறைக்கு வந்து சேராயோ...!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

வியாழன், 25 மார்ச், 2010

பெண்புலி போராளிகள்....

உறவுகளை...
அணைக்கும் கரங்கள்.
ஆயுதங்களை...
அணைக்கத் துடிக்கின்றது
நம் தேச விடுதலைக்காய்.


ஒன்றா.... இரண்டா....
ஓராயிரம் கரங்கள்.
ஒருவனின் பாதைவகுப்பில்
கட்டெறும்பாய் தொடர்கின்றது
ஈழ மண்ணை மீட்பதற்காய்.


மங்கை தான் இவள்
கங்கை போல் இவள் செயல்.
விழி தூங்கிப்பார்த்ததில்லை - இவள்
வீர மரணத்தின் போது...
வீரத்தின் விழிகள் கண்ணீரில் மூழ்கவில்லை.


கல்லறை தான்... எம்
ஈழமண்ணின் கருவறை.
பாரதி தேடிய புதுமைப்பெண்
இவள் தானா....?
இது நிஜம் தானா.....?


பயம் என்ற வார்த்தை
வீரத்திற்குள் புதைந்துவிட்டது.
மண்மீது வைத்த காதலால்...
தாகம் என்ற வேகம்
களம் கண்டு வென்றுவிட்டது.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

சனி, 20 மார்ச், 2010

அன்னமே...

அன்னமே...
உன் பார்வை
கொள்ளை கொண்டதே
என்னையே.


செல்லமே...
உன் மழலை
தென்றலாய் என்
நெஞ்சிலே.


வானமே...
உன்னைத் தாலாட்ட
ஆனந்தமாய் கண்
மூடிக்கொள்.


முத்து முத்தாய்
முத்தம் - நீ...
முகத்தில் தந்தாய்
நித்தம்.


தித்திக்க தித்திக்க...
நீ... பேச
கன்னக்குழி இரண்டும்
கதைகள் பல பேசும்.


சொன்ன சொல்லை...
மீண்டும் நீ சொல்ல
உன் கண்கள் கூட
கவி பாடும்.


பஞ்சு போன்ற பாதத்தில்...
தஞ்சம் கேட்டு ஓடி வந்து
தாயின் மடிப்புகுந்து
சிரிப்பாய்.


தங்க நிலவே...
இன்று போல் என்றும் நீ
தேன் சிந்து
என் வாழ்க்கையில்...!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

ஞாயிறு, 7 மார்ச், 2010

வந்துதித்த நாயகனே...!

தமிழ்த் தாய் மண்ணில்
வந்துதித்த நாயகனே...!
பாசம் என்னும் வலையை - உன்
விழிகளால் பின்னி முடித்தாய்.


முத்து முத்து மணியே மணியே...
முகவரி தந்தாய் முழுநிலவாய்.
வட்ட வட்ட விழியே விழியே...
வாழ்த்துகின்றோம் உன் வருகைகண்டு.


சின்னச் சின்னத் துன்பமெல்லாம்
உன்னைக் கண்டு போனதின்று
மாதா பிதா உன்னருகில்
சின்ன மாமன் உன் விழியில்.


உறவு என்று சொல்ல.....
ஓராயிரம் முறைகள் உண்டு கனடாவில்.
நீ.... வாழ்க என்று சொல்ல
பல்லாயிரம் வாழ்த்து உண்டு எம் உள்ளத்தில்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

சனி, 6 மார்ச், 2010

சுயநினைவு அற்ற பள்ளிப்பருவம்


அம்மா நீ எங்கே....?
உன் பிள்ளை இங்கே...
தலைவிரி கோலமாய்...
தனைமறந்து வாழ்கின்றாள்.
தாயே நீ எங்கே....? இவளை
தவிக்கவிட்டுச் சென்றாய்.


ஊர் இருண்டு போனாலும்....
உன் மகள்விழி உறங்கவில்லை.
ஏதோ நினைவுகள்....
ஏதோ எண்ணங்கள்....
தோன்றி மறையுது
அவள் உள்ளத்தில்.


இரவும்... பகலும்....
இவளுக்கு நிகர்தானா....?
இறைவன்... கொடுத்த...
வரம்தான் இதுதானா....?


உறவைக் கூடதெரியவில்லை.
உள்ளுடுப்புத் தெரிவதைப் புரியவில்லை
படிக்கும் போது பரிசுகள் பெற்றபிள்ளை.
அரக்கர்படையால் கெடுத்த போது...
தொலைந்து போனது எதிர்காலம்
மறைந்து போனது இவள் எண்ணம்.


விதியா....சதியா....?
இவள் ஒரு தமிழிச்சியா....?
இதுதான்.... குறையா....?
தமிழுக்கு வந்த கதியா....?


ஈழமகள் உங்கள் அபிசேகா.

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

என்ன பாவம் செய்தேன்....

நெஞ்சிலே....
அன்பின் ஏக்கம்.
தொலைவிலே....
தாய்தந்தை இல்லம்.


என் கரத்திலே தாங்குமா.
தம்பிமாரின் பாரம்.
கல்லாய்ப் போனது...
கபடமில்லா என் இதயம்.


அன்னை மடி சூடு...
அறியவில்லை நாங்கள்
அன்னை போனபின்னே...
அநாதையானோம் நாங்கள்.


அன்பு காட்டி ஊட்டி விட்டால்
அன்னை போல் ஆகுமா....?
அள்ளி அணைத்து முத்தமிட்டால்
தந்தை போல் ஆகுமா....?


பத்து வயது கூடியிருந்தால்....
பத்துப் பாத்திரமாவது துலக்கியிருப்பேன்
பிஞ்சுக் கரத்தால்
பிச்சை கூட எடுக்க முடியவில்லையே...!


என்ன பாவம் செய்தேன்....
என் தாய்தந்தையை இழப்பதற்கு.
தமிழீழத்தில் பிறந்தது குற்றமா...?
தமிழ்ப்பால் குடித்தது குற்றமா....?


அஞ்சி அஞ்சி வாழ்கின்றோம்
மின் கம்பிகள் ஊடே.
அலட்சியமாய்ப் பார்க்கின்றதே
வெளியுறவு நாடே.


நான் மட்டும்
அநாதையல்ல...
உறவென்று சொல்ல
இரு உள்ளங்கள் என்னருகே...!


அது கூட இல்லாமால்....
பேசும் மழலை மொழியும்
பேச உறவின்றி
அநாதையாய் அழுகின்றது.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

சனி, 27 பிப்ரவரி, 2010

ஞாபகம் வருகுதா..?

விழி மோதி வந்த காதல்...
நாணம் கண்டு...
கால்விரல் போடுது கோலம்.
வழி தேடி வந்த காதல்...
பயம் கண்டு...
வலைத்வீசித் தேடுது வார்த்தை.

ஏதோ ஒரு ஜென்மத்தில்....
என் காதலைத் தந்தேன்
உன் உள்ளத்தில்.
நினைவுகள் கனியுது...
இந்த ஜென்மத்தில்.
ஞாபகம் வருகுதா... உனக்கு
ஞாபகம் வருகுதா..?

ஆதாம் ஏவாள் காலத்தில்...
காதல் பிறந்தது பூங்காவனத்தில்.
ஆணும் பெண்ணும் சேர்ந்தால்...
அடுத்த வம்சம் உருவாகும்
அந்த ஆணும் பெண்ணும் நீயும் நானும்.
ஞாபகம் வருகுதா... உனக்கு
ஞாபகம் வருகுதா..?

வெள்ளைப் பூவைக் கண்டால்....
வேப்பமர நிழல் தேடுவாய்.
கல்லை வைத்து... பூவை வைத்து...
கைகூப்பிக் கண் மூடி
கணபதி கவசம் பாடுவாய்.
ஞாபகம் வருகுதா... உனக்கு
ஞாபகம் வருகுதா..?

பள்ளி செல்லும் போது....
பாதை இரண்டும் வேறு
என்னைப் பார்த்த பின்
தான் செல்வாய்
பள்ளிக்கூடம் அன்று.
ஞாபகம் வருகுதா... உனக்கு
ஞாபகம் வருகுதா..?

பருவம் அடைந்த போது....
பார்க்க என்னை மறுத்தாய்.
பாசம் உள்ளே இருந்தும்
வேசம் போட்டுத் திரிந்தாய்
ரோசம் உள்ள பெண்ணே..!
ஞாபகம் வருகுதா... உனக்கு
ஞாபகம் வருகுதா..?

காதல் கவிதை எழுதி...
கையில் தந்தேன் உனக்கு.
காதல் முத்தம் ஒன்று
கன்னத்தில் தந்தாய் எனக்கு.
கடைசிவரை காத்திரு என்று.
ஞாபகம் வருகுதா... உனக்கு
ஞாபகம் வருகுதா..?

ஈழமகள் உங்கள் அபிசேகா

சனி, 20 பிப்ரவரி, 2010

காதலுக்கு ஜாதி என்ன...?


உன் சோக வரிகளில்
மூழ்கிவிட்ட நண்பிகளில்...
நானும் ஒருத்தி....!


உன் சோக‌த்தின் பாதியைக்
கொடுத்து விடு...
ந‌ல் ந‌ண்ப‌ரிட‌ம்.....!


உன‌க்காய்....
ஒரு நிமிட‌ம்
மெள‌ன‌ம்.


க‌ட‌வுளிட‌ம்...
மண்டியிட்டுக்
கேட்கின்றேன்.


எத‌ற்காய்ப்...
ப‌டைத்தாய்
காத‌ல் வ‌ரிக‌ளை.....!


க‌ல‌ங்க‌ம் இல்லாக் காத‌ல்...
காத்திருக்கும்
சாகும் வரை.....!


காதலுக்கு...
ஜாதி என்ன
மதம் என்ன...?


உன் காதலுக்கு...
முள்வேலி போட்டு
விட்டால் காதலி.


காத்திருக்கும்
உம் உறவுகள்
உயிரோடு வாழ்வதற்காய்...!


நீ செய்வது யாகமா...?
அவள் செய்வது தியாகமா...?
உம் உறவுகள் செய்வது நியாயமா...?


பதில் தேடி...
நாமும் அலைகிறோம்...
விடை கொடு நண்பரே....!


ஈழமகள் உங்கள் அபிசேகா.



வியாழன், 18 பிப்ரவரி, 2010

நட்பின் வாழ்த்துகள்.

அழகு என்ற பொருள்
உன்னைப் பார்த்ததும்
அகராதியில்
இருந்து வில‌க...


அகிலம் உன்னை அழைக்க...
ஆனி உன்னைத் தாளாட்ட...
அன்னைமடி நீ... தூங்க‌...
அழகாய் வந்து அவதரித்தாய்.


அன்பும் பண்பும்...
அள்ளித்தந்த உறவை
அணைத்துவிடு
உன் புகழால்.


சொல்லும் செயலும்...
கற்றுத்தந்த குருவை
கடைசிவரை நினை
உயர்வாய்.


உனக்குள் ஒரு கனவு
உதயமாகி இருக்கும்.
உன்னோடு உறவாடும் இதயம்
ஏன் இன்னும் மெளனம்.


காதல் கை கூடும்...
உன் வரவால்
கடைசிவரை நினை
உன் உறவை.


உகலத்தின் சுடர்...
உன் நாமம்.
உயரப்பறக்க
நட்பின் வாழ்த்துகள்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

மனதைக் கொள்ளை அடித்தாய்.

கொள்ளை அடித்தாய் - என் மனதைக்
கொள்ளை அடித்தாய்.
கண்ணாலே பேசிய‌....கவிதை
என் நெஞ்..சிலே விம்பமாய்ப் பதிந்ததடி
உன்னாலே ஒரு.... ஜீவன்
உதயம் ஆனான் சூரியனாய்.!


வானத்தில் உன்னைக் கொண்டு
வளர் பிறையில் ஊஞ்சல் கட்டி.
வ‌ளமாக வாழ‌ வைப்பேன்.
வ‌ல‌து காலை எடுத்து வை.
வ‌ருங்கால‌ தெய்வ‌மே....!


மொழிக‌ளை ம‌துவாக்கி...
ம‌துவிலே நீ குளிக்க.
ம‌ன்ம‌த‌னாய் நான் வ‌ந்து...
ம‌ல‌ர்க‌ளைத் தூவி...
ம‌ணிம‌குட‌ம் சூடுவேன்.!


மேக‌த்தை மெத்தையாக்கி...
வெண் முகிலைப் போர்வையாக்கி.
விண் மீன்க‌ள் கண்ணுற‌ங்க‌...
உன் காத‌ல் சேர்ந்துற‌ங்க.
தென்றலாய் தாளாட்டுவேன் உன்னோடிருந்து.!


ஈழமகள் உங்கள் அபிசேகா.







திங்கள், 15 பிப்ரவரி, 2010

அணைக்க இரு கை இல்லை.

அணைக்க இரு கை இல்லை.
அடுத்தவனுக்கு உதவ
என் கை...
இயலவில்லை.


சாதனை படைக்கக்...
காத்திருந்தேன்.
வேதனை என்னை...
அள்ளிச் சென்றது.


என்னுடன் உறவை....
கண்ணெதிரே இழந்தேன்.
உணர்வற்ற தந்தையை...
நினைத்துக் கலங்குகின்றேன்.


உலகம் இன்று...
என்னை வேதனையோடு பார்க்கின்றது.
என் உருவம் குலையமுன்...
அந்த உலகமே வேடிக்கை பார்த்தது.


இதயத்தில்...
கசிகின்றது குருதி.
இதைத் தாங்குமா...?
விழிகளில் வெளிவரும் கண்ணீர்.


ஒரு கை இருந்தாலே....போதும்
ஓடி ஓடிப் படித்திருப்பேன்...
இரு கை இழந்ததால்....
இறைவனை இன்று மறந்துவிட்டேன்.


பொய்க்கை போட....
உதவிய நல் உள்ளங்களுக்கு
இருகை இல்லா....
சஜீவனின் நன்றிகள் கோடி.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

உன் நினைவுகள்...நனைகிறது.

மழையாய்...
வரும் கவியில்.
உன் நினைவுகள்...
நனைகிறது.


வானில் மிளிரும்...
விண் மீன்கள்
பூக்களாய் மாறி...
உன்பாதம் தொடுகிறது.


தேரில்...
வரும் சிலையில்.
உன் விம்பம்...
தெரிகிறது.


தென்ற‌ல் வ‌ந்து...
மோதிய‌தால்
பாலைவ‌ன‌ம்...
சோலைவ‌ன‌மாய் மாறிய‌து.


உனக்கும்...
எனக்கும் இடையில்
எம் சுவாசக்காற்றுகள்...
காதலிக்கின்றது.


நதி போல்...
வரும் உறவில்.
வாழ்ந்து காட்டுவோம்...
விரைவில்


நாளை மலர...
விரும்பா விடியல்.
நமக்காய்...
இரவாய் தொடர்கிறது.


நீ பேசுகின்ற...
இனிமை கண்டு
தமிழ் மொழிக்கே...
மகிமை இன்று.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

விழ விழ எழுவோம்......

விழ விழ எழுவோம்......
விடியலைக் காண்போம்.
விழ விழ விரைவோம்......
விடுதலை வெல்வோம்.


எம்மில்.... ஓடும் ..... குருதி.
எம் தாய்மண்ணில் தவழ்வது உறுதி.
எம்மில்.... சேரும்..... உறவு.
எம் தாய்மண்ணில் வாழ்வது உறுதி.


சத்தியம்....
தாய் மண் மேல் சத்தியம்.
சத்தியம்....
தமிழ் மொழி மேல் சத்தியம்.


நாவால் பேசும் வார்த்தை....
நாடே போற்றும் பலநாள்.
தீயாய் மாறும் பார்வை.....
எதிரியைக் கொல்லும் ஒருநாள்.


சத்தியம்....
எம் தாய் மேல் சத்தியம்.
சத்தியம்....
எம் தலை மேல் சத்தியம்.


வீட்டில் வாழும் உறவு....
சுடு காட்டை நோக்கி நகர்வு.
சுத்தம் இல்லா வார்த்தை
சொன்னான் அரசு அன்று.


நிச்சயம்......
நீதி நேர்மையின் பக்கம்.
நிச்சயம்.....
நியாயம் தர்மத்தின் பக்கம்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

வியாழன், 11 பிப்ரவரி, 2010

விழிகளில்...பாதை அமைத்தேன்.

என் விழிகளில்...
பாதை அமைத்தேன்
உன் வருகைக்காக.
இமைகள் மூடிக்...
காத்திருந்தேன்
உன் அன்புக்காக.


இருளிலே...
உன் பார்வை
நிலவைப் போலே
நிரந்தரமாய்...
தங்கிவிடு என்
இதயத்துள்ளே


நிழலிலே...
உந்தன் உருவம்
சிலையைப் போலே.
நீ... சொல்லிவிட்டாய்...
உந்தன் காதல்
என் மனசைப் போலே.


தரணியே...
தடுமாறுது...
உந்தன் வரவைக்கண்டு.
தடுத்து...
நிறுத்தவேண்டும்
உன்மேல் வைத்த கண்களை இன்று.


ஈழமகள் உங்கள் அபிசேகா.



செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

அழு... ஓவென்று அழு.

எம் தமிழினமே.....
அழும்போது.
உன்னினம்
கைகொட்டிச் சிரித்தது.


இன்று நீ....
மனமுருகி அழும் போது.....
உன்னினமே
வேடிக்கை பார்க்கின்றது


இறந்த எம் உறவுகள்...
திருப்பி எமக்குக் கிடைக்குமா....?
இழந்த எம் மானம்....
திருப்பி எமக்குக் கிடைக்குமா...?


பதவி பதவி என்று...
காக்கிச் சட்டையிலே
பல பொத்தான்கள்
பல நிறங்களில்.


இனியும் மறந்துவிடாதே....
அத்தனையும் எம் உறவை
அகோரமாய்க் கொன்றதற்கு
கிடைத்த...பரிசுப் பொத்தான்கள்.


அன்று மலர்ந்தது...
உன் சந்ததியின் புன்னகை.
இன்று எம் கண்ணீரில் மிதக்கின்றது.
எம் சந்ததியின் நினைவுகள்.


உன் புத்த இனத்துக்குள்ளே
பிளவுகள் வரவேண்டும்.
அந்த நேரம் புரியும்...
எம் இதயத்தின் வலி.


தமிழருக்காய் திறக்கப்பட்ட...
சிறைக்கதவுகள்.
இன்று உன் கணவருக்காய்க்
காத்திருக்கின்றது.


நீ... மட்டுமல்ல பெண்ணே...
தமிழனுக்கு எவன் எவன்
தீங்கி விளைவித்தானோ
அவன் அவனுக்கெல்லாம்....
இப்படித்தான் கடைசியில்.


ஈழமகள் உங்கள் அபிசேகா

ஞாயிறு, 7 பிப்ரவரி, 2010

முடிசூடா மன்னனே...!


முடிசூடா மன்னனே...!
உன் இசையின் வரலாறு...
சோக மழையாய்
மாறிய கீதம்.


பாப் என்னும் புதிய உலகை...
பரப்பிய பெருமை - உனக்கு
மட்டும் தான் சொந்தம்.


ஆவணி 29 இல்....
அதிசயப் பிறவியாய்
அவதரித்தாய் இந்த அகிலத்தில்.


ஆண்டுகள் விலக...
ஆதரித்தாய் இசையை...
ஏழ்மையின் நிலையில்...
ஏற்றம் கண்டாய் நடிப்பில்.


மேனியில் சிறு
மாற்றம் கண்டோம்.
மெய் சிலிக்கும்
நடிப்பைக் கண்டோம்.


வானத்தை அலங்காரம் செய்கிறது
நட்சத்திரக் கூட்டம் - உன்
இசையை அலங்காரம் செய்கிறது
ரசிகர் கூட்டம்.


வாய் திறந்து நீ பாடினால்....
வந்த வலி நின்று விடும்.
நோய் தழுவி நீ சாதலால்...
மறுபடியும் உன் இசை..
இவ்வுலகில் படர்ந்து விடும்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

சனி, 6 பிப்ரவரி, 2010

காமத்தின் எல்லை வரை..........


என் சிகையில்...
உன் முகம் சிக்கிவிட...
உணர்வலைகள் உயிர் பெற்றுவிடும்.
உதடுகளின் ஈரம்
கண்பார்வை மேல் விழ...
மறு ஜென்மம் மலர்ந்து விடும்...!!


ஆணுக்கும் பெண்ணுக்கும் அடிமையறை
படுக்கை அறை தான்.
பந்த பாசம் பார்வையில்...
பட்ட இன்பம் போர்வையில்...
தெய்வீக வாசனை அவன் வியர்வையில்...
தென்றலாய் மாறியது அவள் மேனியில்...!!


இருட்டில் முகம் நடமாட...
படுக்கும் முறை நிலை தடுமாற...
மூச்சோடு மூச்சு பேசி விளையாட...
முளைத்தது மூன்றாம் பிறை.
வரம்புக்கு மீறிய ஆசை.
வந்தது கட்டிலில் ஓசை...!!


கண் மூடிக் கண்ட சுகங்கள்...
கை கால் கண்ட நியங்கள்...
காலத்தால் அழியாத நினைவுகள்.
கையணை தலையணையாய் மாறிவிட...
தலையணை தடங்களாய் மாறிவிடும்.
உடலும் உயிரும் உலாவுமிடத்தில்.
உடைகள் தடைகளாய் மாறிவிடும்...!!


பெண் உள்ளம் பேசிவிட...
ஆண் உள்ளம் மௌனமாகிவிடும்.
இது தான் தலையணை மந்திரமா...?
தவிக்க முடியாத யந்திரமா...?
அவள் மார்புக்கு மத்தியில்...
புதைக்கப் பட்ட அவன் முகம்
பூரிப்படைந்த காட்சி - என்
கண்கள் மட்டும் தான் சாட்சி...!!


நாவால் நனைந்த உன் மேனி...
மூச்சுக் காற்றால் உலர்ந்து போனாய் நீ...
பதுமையாய் வளர்த்த பற்கள்...
பௌவியமாய் கடித்த...
சிவந்த கன்னங்கள்.
சில் என்று ஏறிய உணர்வுகள்...
சீறியது இன்பத் துளிகளாய்...!!


தடைகளை உடைத்து வந்த...
சுகந்திரப் புறாவாய்...
அடைக்கலமாய்த் தாவியது நெஞ்சறையில்.
இதயத் துடிப்பின் ஓசை...
இளமைப் பருவத்தின் ஆசை...
இரண்டும் பொக்குள் கொடி உறவுகள்...!!


காதோரம் கதை கேட்க...
காத்திருந்தேன் சில நாட்கள். - என்
பூவோடு விளையாட...
பூ முடிந்திருந்தேன் சடையோடு.
தேனோடு உறவாட...
தேர்ச்சி பெற்றேன் உன்னோடு.
மானோடு விளையாட...
மாட்சிமை பெற்றேன் தாயாக.
சீறோடு வளப்பேன்....
சிந்தனையில் சிதறாமல்...!!!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

உன் நினைவருகில்.

விண்ணைத் தாண்டிப்
போகுது.....என் எண்ணம்.
என்னைத் தாண்டிப்
போனது....வந்த துன்பம்.


மடல் கண்டு உன்னை அணைக்க....
கரம் இங்கு நீட்டுகிறேன்.
நீ..... வருவாயா...
உன்னிதயத்தைத் தருவாயா.


உன் கைப்பட்ட வரிகள்...
என் மீது விழுந்து.
புதுராகம் பாடுது...
என்னுள்ளம்.


மை கொண்ட விழிகள்...
உன் காதல் கண்டு.
மணவறை ஆனது...
என்னிதயம்.


கிளிகூட உன் பெயரை...
அழகாகச் சொல்லும்.
அதுகூட பார்க்கிறது...
உன்வரவை.


உன் காதல்...
மடல்கள்.
இரவென்றல் எனக்கு...
பஞ்சுமெத்தை.


காலம் எல்லாம்...
உன்னோடு வாழ.
காத்திருக்கின்றேன்...
உன் நினைவருகில்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.



செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

என் இதயம் .... வலிக்கிறதே....!

என் உயிரே.... என் உயிரே...
என் இதயம்.... அழுகிறதே...!
என் உறவே.... என் உறவே...
என் இதயம் ....வலிக்கிறதே...!


வாழ்க்கை என்னும் கோபுரத்துள்
வாசல் வரை சென்றிருந்தேன்.
வழிமறித்து இன் ஒருத்தி
வல்லமையால் சென்றுவிட்டால்.


தூங்கும் கண்கள்...
கண்ணீரில் மிதக்கின்றது.
பேசும் நியங்கள்...
மெளனமாய் அழுகின்றது.


உத‌டுக‌ள் இருந்தும்...
உண்மைக‌ள் இருந்த‌தில்லை.
உண‌ர்வுக‌ள் இருந்தும்...
உள்ள‌ம் சாக‌ விரும்ப‌வில்லை.


தேன் நில‌விற்கு செல்ல‌ இருந்த‌ வாழ்க்கை.
தேன் கூட்டில் சென்று விட்ட‌து.
யார் க‌ண் ப‌ட்ட‌தோ....
புண் ப‌ட்டுப் போன‌து என் ம‌ன‌ம்.


சாவிற்கு வ‌ழி தேடுகிறேன்.
சாட்சிக‌ள் இல்லாம‌ல்...
நேர்மைக்கு வ‌ழி தேடுகின்றேன்
வ‌ஞ்ச‌னைக‌ள் இல்லாம‌ல்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.







வரம் தர வேண்டும்.

வரம் தர வேண்டும்
தலைவா..........- நீ
வரம் தர வேண்டும்.
போருக்குப் போக........
வரம் தர வேண்டும்.


போரிலே புலி முகம்.....
ஒளி பெற வேண்டும்.
போர்க்களம் புகுந்து..... - அங்கே
புலிக்கொடி பறந்திட வேண்டும்
புலிக்கொடி பறந்திட வேண்டும்


கானகம் காக்கும்....
வானகம் போற்றும்.
வையக மைந்தன்....
எம் தலைவன்.


உன் பாதச்சுவடுகளில் ஒளிரும்
இலட்சியக் கனவுகள்
இன்றே மலந்திட வேண்டும்....- அது
இன்றே மலந்திட வேண்டும்


ஆயிரம் ஆயிரம்....
கருவறை போற்றும்.
காவிய நாயகர்....
நம் மறவர்.


எம் வேங்கைகள் துயிலும்....
ஈழத்து மண்ணில்.
எதிரியின் பாதம்பட விடுவோமா...-நாம்
எதிரியின் பாதம்பட விடுவோமா.


ஈழ‌ம‌க‌ள் உங்க‌ள் அபிசேகா.

ஞாயிறு, 31 ஜனவரி, 2010

எழுதுகோல் தீக்குச்சி ஆனதடா...!

முகம் அறியா....
முத்துக்குமாரா - உன்
முகவரி இன்று
முழுமையாய் பதிந்தது
உலகத்தமிழர் நெஞ்சிலடா...!


எழுதுகோல் என்னும்
தீச்சுடரால்....
ஏற்றி வைத்தாய்
பல தீபமடா...!


ஏழ்மையில் வாழ்ந்தாலும்
நேர்மை என்னும்
நேர்... வழியில்...
போனது உன் உள்ளமடா...!


ஈழத்தமிழர்
வேதனையை...
ஏற்க மறுத்தது
இந்திய தேசமடா...!


அந்தச் சோகக்கதையை
சொந்தக்கதையாய்
எழுதிவிட்ட எழுதுகோல்
தீக்குச்சி ஆனதடா...!


பார் எங்கும் உன் கதை
பாரத தேசத்தில்...
ஈழ உணர்வாளர்
பொழிகின்றனர் கண்ணீர் மழையடா...!


நீ ஏற்றி
வைத்த தீபம்
தொடர் அரங்கேற்றம்
ஆகுதடா...!


ஈழமண்ணிற்காய் உன்
உயிர் போனதடா...
இனி நீயும் எம்
உறவில் ஒருவனடா...!


ஈழமகள் உங்கள் அபிசேகா.

சனி, 30 ஜனவரி, 2010

சுவாச தேவதையே.....!


என் சுவாச தேவதையே...!
உன்னை என் விரல்களால்
அணைக்கும் போது...
எனக்குள் ஓர் உணர்வு
என்னை அறியாமலே...
அலை பாய்கின்றது.


விழிகளை மூடி
உன்னிதழோடு என்னிதழ்
முத்தமிடும் போது...
உன் சுவாசக் காற்று
என்னிதயத்தை ஒரு
நொடியில் அணைக்கின்றது.


என் காதல் தேவதையே...!
உன்னைக் கைவிட்டால்
என் ஐம்புலன்களும்....
என்னை மறந்து விடும்.
அணு அணுவாய்த் தம்
உயிரைப் போக்கிவிடும்.


என் இதயத்தைக் - குடி
கொண்ட தேவதையே...!
உன்னை ஒரு நாள்
அணைக்கத் தவறினால்...
என் வாழ்க்கை இருளில்
மூழ்கி விடும்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

செவ்வாய், 26 ஜனவரி, 2010

வீரனுக்கு அழகு இதுவல்ல...



தாயிற்கு ஒரு பிள்ளை ஆனாய் - ஏன்
ஆமியில் போய்ச் சேர்ந்தாய்.
நாட்டைக் காப்பது...
வீரனுக்கு அழகு.


ஆனால் எம் தேசத்தை அழிப்பது
உனக்கு அழகல்ல புகழல்ல...
ஈழத்தை அழிக்க முயன்றால்...
அழிவது நாமல்ல நீயல்லோ...


வீரத்தைக்.....
காட்டவில்லை போரில்.
வீழ்ந்த ஆமியைத்.....
தூக்கவில்லை உன் கரத்தில்.


எட்டப்பன்.....
கூட்டத்தின் கூற்றில்.
எடுத்து வைத்த பாதம்...
சரிந்தது இன்று ஏட்டில்.


அப்பாவி மக்களைச்.....
சுட்டுத்தள்ளினாய் நேரில்.
அறியாத பாவைகளை.....
அம்மணமாக்கினாய் சாவில்.


அத்தனையும் செய்துவிட்டு.....
தள்ளிவிட்டாய் புதைகுழியில்.
இதைப் பார்த்து உயர்பதவி.....
கிடைத்தது உன் கையில்.


மதம் கொண்ட யானைக்கும்....
வெறி கொண்ட சிம்மத்திற்கும்....
தேர்தலில் போட்டியா....? இல்லை
சாவதில் போட்டியா... புரியவில்லை.


ஈழமகள் உங்கள் அபிசேகா.















ஞாயிறு, 24 ஜனவரி, 2010

சிறைக்கம்பிகள் பேசினால்.....!


சிகரத்தை எட்டிப் பார்க்கும்
உனக்கு...
சிறைக் கம்பிகள் எண்ணுவது
ஏனடா...!


சிங்களக் காடையர்
வீசிய வலையில்
சிக்கிய தமிழ்த் தோழா....
உன்னைப் பார்த்ததும்
வடிகின்றது கண்ணீர்.


என்னைப் பற்றுவதால்....
உனக்குப் பெருமையல்ல.
உன்னை எனக்குள் அனைப்பதால்....
அளவில்லா ஆனந்தம்.


காரணம் மொழிகின்றேன் கேளடா தமிழா...
நீ.... கஞ்சா கடத்தவில்லை.
கொலை கற்பழிப்பு செய்யவில்லை.
ஆள்க் கடத்தல் கடத்தவில்லை.


தமிழுக்காய் வாதாடி இருப்பாய்...
தாய் மண்ணிற்காய் போராடி இருப்பாய்.
தமிழ் உறவுகளுக்காய்....
உன்னையே வெடிகுண்டாய் மாற்றி இருப்பாய்.


இது தான் நீ... செய்த குற்றமா...?
இல்லை இல்லை
உன்னைப் பார்த்துத் திருந்தட்டும்
உண்மைக் குற்றவாளிகள் தோழா...!


ஈழமகள் உங்கள் அபிசேகா

வெள்ளி, 22 ஜனவரி, 2010

காதலில் விழுந்து விட்டேன்.



உரச உரச வருகுது நெருப்பு...
உன்னைப் பார்த்ததும் வருகுது சிரிப்பு...
ஆடை இல்லா மேனியை
ஆளும் சக்தி எனக்கில்லை.


நான்கு சுவர்களின் மத்தியில்
கூட்டம் போட்டு பேசுவோம்.
நீயும் நானும்.. சேரும் காலம்.
வரும்.. வரும்.. வரும்.


காதல் வசனம் பேசமுன்
காமம் பற்றி பேசுவோம்.
வீசும் காற்றை தூது சொல்ல...
பேசும் உயிரைக் கொடுத்திடுவோம்.


காதல் என்ற பூஜை அறையை
காம நூலாய் மாற்றிடுவோம்.
இதய அறையில் குடி கொண்டு...
இரவு இன்றி வாழ்ந்திடுவோம்.


ராகம் கேட்டு பாடமுன்
ராசிப் பலனைப் பார்த்திடுவோம்.
பூசும் மஞ்சள்; கிண்ணத்தில்...
புதிய உலகம் படைத்திடுவோம்.


உலகை ஆளும் சக்தி எல்லாம்
உனக்கும் எனக்கும் பாதி பாதி.
உள்ளம் கவர்ந்த காதலனாய்...
காலமெல்லாம் நீ வேண்டும்.


என்னுயிரை எடுத்து தந்துவிட்டேன்
எனக்கு நீ... தான் நீதிபதி.
காதல் என்னும் சின்னத்தில்...
இருவர் நாமம் பதியட்டும்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

வியாழன், 21 ஜனவரி, 2010

வன்னியின் காதல் இதுதான்....



கண்ணா..... வருவாயா.......?
காதல் முத்தம் தருவாயா.....?
உன்னைப் பார்த்த மயக்கம்.
இன்னும் போகவில்லை.
விழியில் தவழும் கண்ணீர்.
விரைவில் ஆறாய் மாறும்.
புவியில் வாழ்ந்த காலம்.
பூவாய் மாறிப் போகும்.


புயலே........... புயலே...........!
ஏன் இந்தக் கோபம்.
கடலே........... கடலே...........!
ஏன் இந்தத் தாகம்.
என் காதல் உடைந்து
கல்லறை வாசல் செல்கிறது. - உன்
பாதம் பட்ட இடமெல்லாம்
படுத்து உறங்குகிறேன் இன்று.
பண்ணிசை மன்னனே...... உன்
பாட்டு என்னிடம்............!!!


மழையே.......... மழையே........!
ஏன் இந்த சோகம்.
மனமே............. மனமே............!
ஏன் இந்த வாதம்.
வாழ்வில் ஒரு படி
வாழவில்லை என் காதல்.
பூவின் மணம் போல்
பூக்க வில்லை நம் காதல்.
தேனே.......நீ........ எங்கே.......?
தேடுகிறேன்........உன் பாதம்...!!


விதியே........... விதியே............!
ஏன் இந்தக் கோலம்.
சதியே.......... சதியே...........!
ஏன் இந்தப் பாவம்.
திரி கொண்ட தேசம்
தீர்ப்புக் கிடைக்கவில்லை இன்னும்
வெறி கொண்ட வேதம்
வெந்து போனது எம் தேசம்
மனமே.......... நீ உள்ள தூரம்
என்னை அழைக்க மறந்து விடாதே ...!!


எரி குண்டே ....... எரி குண்டே.......!
ஏன் இந்த நாசம்
வான் குண்டே...... வான் குண்டே......!
ஏன் இந்த அகோரம்.
கூடு விட்டு கூடு வந்த
நம் காதல் சேர முன்.
என் இதயத்தைப் பறித்துவிட்டாயே.
இதயமில்லாக் குண்டே.....
இனி என் வாழ்வு
இருட்டுக்குள் சங்கமம் தனா...?...?...?


ஈழமகள் உங்கள் அபிசேகா.





Related Posts with Thumbnails