ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

மனதைக் கொள்ளை அடித்தாய்.

கொள்ளை அடித்தாய் - என் மனதைக்
கொள்ளை அடித்தாய்.
கண்ணாலே பேசிய‌....கவிதை
என் நெஞ்..சிலே விம்பமாய்ப் பதிந்ததடி
உன்னாலே ஒரு.... ஜீவன்
உதயம் ஆனான் சூரியனாய்.!


வானத்தில் உன்னைக் கொண்டு
வளர் பிறையில் ஊஞ்சல் கட்டி.
வ‌ளமாக வாழ‌ வைப்பேன்.
வ‌ல‌து காலை எடுத்து வை.
வ‌ருங்கால‌ தெய்வ‌மே....!


மொழிக‌ளை ம‌துவாக்கி...
ம‌துவிலே நீ குளிக்க.
ம‌ன்ம‌த‌னாய் நான் வ‌ந்து...
ம‌ல‌ர்க‌ளைத் தூவி...
ம‌ணிம‌குட‌ம் சூடுவேன்.!


மேக‌த்தை மெத்தையாக்கி...
வெண் முகிலைப் போர்வையாக்கி.
விண் மீன்க‌ள் கண்ணுற‌ங்க‌...
உன் காத‌ல் சேர்ந்துற‌ங்க.
தென்றலாய் தாளாட்டுவேன் உன்னோடிருந்து.!


ஈழமகள் உங்கள் அபிசேகா.







0 கருத்துகள்:

Related Posts with Thumbnails