ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

ஞாயிறு, 7 மார்ச், 2010

வந்துதித்த நாயகனே...!

தமிழ்த் தாய் மண்ணில்
வந்துதித்த நாயகனே...!
பாசம் என்னும் வலையை - உன்
விழிகளால் பின்னி முடித்தாய்.


முத்து முத்து மணியே மணியே...
முகவரி தந்தாய் முழுநிலவாய்.
வட்ட வட்ட விழியே விழியே...
வாழ்த்துகின்றோம் உன் வருகைகண்டு.


சின்னச் சின்னத் துன்பமெல்லாம்
உன்னைக் கண்டு போனதின்று
மாதா பிதா உன்னருகில்
சின்ன மாமன் உன் விழியில்.


உறவு என்று சொல்ல.....
ஓராயிரம் முறைகள் உண்டு கனடாவில்.
நீ.... வாழ்க என்று சொல்ல
பல்லாயிரம் வாழ்த்து உண்டு எம் உள்ளத்தில்.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

0 கருத்துகள்:

Related Posts with Thumbnails