ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

திங்கள், 15 பிப்ரவரி, 2010

அணைக்க இரு கை இல்லை.

அணைக்க இரு கை இல்லை.
அடுத்தவனுக்கு உதவ
என் கை...
இயலவில்லை.


சாதனை படைக்கக்...
காத்திருந்தேன்.
வேதனை என்னை...
அள்ளிச் சென்றது.


என்னுடன் உறவை....
கண்ணெதிரே இழந்தேன்.
உணர்வற்ற தந்தையை...
நினைத்துக் கலங்குகின்றேன்.


உலகம் இன்று...
என்னை வேதனையோடு பார்க்கின்றது.
என் உருவம் குலையமுன்...
அந்த உலகமே வேடிக்கை பார்த்தது.


இதயத்தில்...
கசிகின்றது குருதி.
இதைத் தாங்குமா...?
விழிகளில் வெளிவரும் கண்ணீர்.


ஒரு கை இருந்தாலே....போதும்
ஓடி ஓடிப் படித்திருப்பேன்...
இரு கை இழந்ததால்....
இறைவனை இன்று மறந்துவிட்டேன்.


பொய்க்கை போட....
உதவிய நல் உள்ளங்களுக்கு
இருகை இல்லா....
சஜீவனின் நன்றிகள் கோடி.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

2 கருத்துகள்:

மதுரை சரவணன் சொன்னது…

ungkal sokam ottikondathu. thannambikkai vai , nitchayam kai kotukkum .kavithai sutukirathu, yaarum saaka villaye...

ஈழமகள் சொன்னது…

மதுரை சரவணன்.....அண்ணா
உங்களுக்கு என் நன்றிகள்.

Related Posts with Thumbnails