ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

உன் நினைவுகள்...நனைகிறது.

மழையாய்...
வரும் கவியில்.
உன் நினைவுகள்...
நனைகிறது.


வானில் மிளிரும்...
விண் மீன்கள்
பூக்களாய் மாறி...
உன்பாதம் தொடுகிறது.


தேரில்...
வரும் சிலையில்.
உன் விம்பம்...
தெரிகிறது.


தென்ற‌ல் வ‌ந்து...
மோதிய‌தால்
பாலைவ‌ன‌ம்...
சோலைவ‌ன‌மாய் மாறிய‌து.


உனக்கும்...
எனக்கும் இடையில்
எம் சுவாசக்காற்றுகள்...
காதலிக்கின்றது.


நதி போல்...
வரும் உறவில்.
வாழ்ந்து காட்டுவோம்...
விரைவில்


நாளை மலர...
விரும்பா விடியல்.
நமக்காய்...
இரவாய் தொடர்கிறது.


நீ பேசுகின்ற...
இனிமை கண்டு
தமிழ் மொழிக்கே...
மகிமை இன்று.


ஈழமகள் உங்கள் அபிசேகா.

2 கருத்துகள்:

கவி அழகன் சொன்னது…

நன்றாக உள்ளது

ஈழமகள் சொன்னது…

நன்றி யாதவன் அண்ணா.

Related Posts with Thumbnails