தொலைந்த விடியலைத் தேடுகின்றோம்.
தூரத்தே காவலரண்கள்...
துணை போகின்றனர்...
தேசத் துரோகிகள்.
களத்திலே வெற்றியின் கடினம்.
கண்ட பின் தான் எமக்கு மரணம்.
போராடுவது சுலபமல்ல...
போராடினால் புரியும் வித்தையுமல்ல...!
தொலை நோக்குப் பார்வை.
தொலைந்தது எதிரியின் ஏவுகணை.
விடிவிற்காய் ஏங்குகின்றோம்.
வீரத்தோடு போராடுகின்றோம்.
உண்மை உலகத்தின் கண்கள்.
உதிரம் ஊர்ரெடுக்க...
உருவம் உருக்குலைய...
உள்ளம் ஊமையாகவில்லை.
தமிழரின் படையல்ல...
தமிழினமே புலிப்படை.
ரவைகள் நெஞ்சில் பாயும் வரை.
படரும் பார்வை நெடுந்தூரம் வரை.
புனிதமான படை தான்...புலிப்படை.
கற்பிலே புனிதம்...கரத்திலே புனிதம்...
கல்லறையிலும் புனிதம்.
ஈழமகள் உங்கள் அபிசேகா.
சுற்றூலா
1 ஆண்டு முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக