ஈழமகளின் கவிமழையில் நனைய வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.
Loading...

வியாழன், 17 டிசம்பர், 2009

காற்றே........ நீயும் பெண் தான்.

காற்றே........ நீயும் பெண் தான்.
என் சுவாசம்.... என்றும் நீ தான்.
எனக்குள்ளே... குடி கொண்டாய்
என் மீது... உயிர் வைத்தாய்.
உலகே... இதோ இதோ.
என் காதல்... கதை இதோ.

காலை க‌ண்ட‌ க‌ன‌வு
காத‌ல் ப‌ண்ண‌ உத‌வும்.
உயிரே... நீ தான் என் தென்ற‌ல்.
உண‌ர்வே... நீ தான் சொல்லு தூது.
மெள‌ன‌ங்க‌ள்....காத‌லுக்கு ஆகாது.
ம‌ர‌ண‌ங்க‌ள்.... க‌ல்ல‌றைக்குப் போகாது.

மாலை கொண்டு உன்னை
வாழ்த்த‌ வேண்டும் ம‌ல‌ரே.
உற‌வே... நீ தான் என் கண்க‌ள்.
உல‌கே... நீ தான் எம் தூண்க‌ள்.
மெள‌ன‌ங்க‌ள்....காத‌லுக்கு ஆகாது.
ம‌ர‌ண‌ங்க‌ள்.... க‌ல்ல‌றைக்குப் போகாது.

தாயில் வைத்த‌ பாச‌ம்
உன்னில் வைக்க‌ ஆசை.
ந‌தியே... நீ தான் என் துணை.
ந‌ல‌மே... வாழ‌ எம் தாய் துணை.
மெள‌ன‌ங்க‌ள்....காத‌லுக்கு ஆகாது.
ம‌ர‌ண‌ங்க‌ள்.... க‌ல்ல‌றைக்குப் போகாது.

ஈழமகள் உங்க‌ள் அபிசேகா





0 கருத்துகள்:

Related Posts with Thumbnails