விதியோடு விளையாடிய விழியே...
வீரப் புலியோடு களம் கண்ட கதிரே...
உலகிற்கு தழிழ் மொழி காட்டிய குருவே...
எம் இனத்திற்கு தமிழ் ஈழம் காட்டிய உயிரே...
தமிழ் மானம் காத்த தங்கத் தலைவா_ உன்
பாதம் பட்ட தாய் மண்ணிற்கு...
பல்லாயிரம் முத்தங்கள் சமர்ப்பணம்.
உன் வழி தனை ஒளியாய் மாற்றிட
தீப்பொறியாய் மாறிய மா... வீரர்களே...
தலை வணங்குகின்றோம் ஈழத்தமிழர் நாம்.
முப்பது ஆண்டுகள் மேல் உன் அனுபவம் கண்டு
முன் நகர்வை முறியடிக்காத இலங்கை அரசு
வல்லரசுடன் கை கோர்ப்பது நியாயமா...?
முகவரி ஒன்று முழுமையாய்க் கிடைக்க...
முப்படைக்கும் முகம் கொடுக்கும் தம்பி கரிகாலனே...
தலை வணங்குகின்றோம் உலகத்தமிழர் நாம்.
வயதொன்று உன்னைக் கடந்தாலும்
வாழிப காலத்தில் வடித்த இலட்சியங்கள்...
நனவாகும் நேரமிது
தமிழீழத் தாகம் தணிய...
தன் மானத் தமிழர் நாம்
தலை நிமிர்ந்து வருகின்றோம் போராட.
உள்ளததால் உயர்ந்த மனிதன் நீ...
உருவாக்குவதில் இயந்திர மனிதன் நீ...
மானம் காக்கும் மறத் தமிழன் நீ...
மதங்கள் போற்றும் மானத் தமிழன் நீ...
காலத்தால் அழியாத அதிசய மனிதன் நீ...
கரிகாலக் கடவுளாய் அவதார மானிடன் நீ...
உலகம் உன்னைக் கண்டு அச்சம்.
உனக்கு இருக்கிறது ஏதோ மச்சம்.
பார்வையால் பலி எடுத்தாய் துரோகியை
கூர்மையால் படுகுழியில் வீழ்த்தினாய் எதிரியை
நேர்மையால் வளைத்துப் பிடித்தாய் தமிழரை _ எம்
நெஞ்சம் ஒருபோதும் மறவாது எம் தங்கத் தலைவரை
ஈழமகள் உங்கள் அபிசேகா.
தமிழாசான் பதிவேடு விருது 2019
6 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக