
பங்குனியில் படர் நிலவில்....
பாதம் பதித்திட்ட பாவை நீ....
பார் உன்னைப் போற்ற....
பல்கலையும் கற்றுவிடு...!
தமிழினம் உன்னைப் வாழ்த்த...
தமிழ்மொழி பேசப் பழகிவிடு...!
தமிழ் ஈழத்தில்.....உன் வருகைக்காய்....
தாய்மாமன் காத்திருப்பான்...!!
எட்டி நடை போடும் அன்னமே...!
ஏன் பிறந்தாய் பூமியில் சொல்லவா...?
கலைகள் அனைத்தும் கற்று விடு....!
கலையுலகில் உன் வாழ்க்கையை
திருப்பி விடு....!
கற்ற கல்வி கைகொடுக்க...
பெற்ற அன்னை பிதா....
தோள் கொடுப்பார்...!
உற்றார் உறவு - உன்
உடன் இருக்க....
உயரப்பறப்பாய் நிலா வரை...!
அகவை ஒன்றைத்தாண்டி விட்டாய்.
அகிலம் போற்றும்.... உன்
அதிசையங்களுக்காய் காத்திருக்கும்
உறவுகள்..... உயிர் நாடிகள்......!!!
ஈழமகள் உங்கள் அபிசேகா
0 கருத்துகள்:
கருத்துரையிடுக