வானத்தில் உனக்காய்...
வடித்த வரிகள்.
கவி என்னும் மழையால்....
கலங்கி பூமியைத் தொடுகின்றது.
நிலவில் உனக்காய்...
வரைந்த ஓவியங்கள்.
வழி தேடி வந்து....
உன் கல்லறையைத் தேடுகின்றது.
பூமியில் உனக்காய்...
புனைந்த புதுக் கவிகள்.
தென்றலைத் தேடி அனைத்து
தேன்தமிழ் கீதம் பாடுகின்றது.
என் நெஞ்சில் உனக்காய்....
புதைத்து வைத்த காதல்.
உன் நினைவைத் தேடி.
கரும்புலியின் கல்லறை தேடுகின்றது.
ஏட்டில் உனக்காய்...
எழுதிய எழுதுகோல் கூட.
மை என்னும் தன்னுயிரை...
தந்துவிட்டது நமக்காய்.
வீட்டில் உனக்காய்...
ஏற்றி வைத்த தீபம் கூட.
திரி என்னும் தன்னுயிரை...
தந்துவிட்டது நமக்காய்.
தமிழீழத்தில் உனக்காய்...
தலைவர் தொடங்கி
தமிழர் வரை அகவணக்கம்.
உன் ஈரமும் வீரமும்....
களத்தினில் கண்டோம்.
ஈழமகள் உங்கள் அபிசேகா.
சுற்றூலா
1 ஆண்டு முன்பு
2 கருத்துகள்:
very nice
Thanks da....
Jen.
கருத்துரையிடுக