முடியுமென நினைத்தால்
மூலதனம் தேவையில்லை....!
முன்னேற்றம் கண்பது
உறுதி என்றால்....
முடிவிற்கு எல்லையே இல்லை...!!
நினைத்தனைச் சாதிப்பவள்...!
நேர்மையை விரும்புபவள்...!
தமிழீழத்தில் ஓர் தென்றல் திசை மாறி வீசியது..... அது நீ பிறந்த போது...! தமிழீழத்தில் மற்றுமோர் தென்றல் திசை தெரிந்து வீசியது..... அது நீ தவண்ட போது...!
தமிழீழத்தில் சில்லென வீசியது காற்று..... அது நீ படிக்கும் போது...! தமிழீழத்தில் மெல்லப் படந்தது பருவக்காற்று..... அது நீ பருவமடைந்த போது...!
தமிழீழத்தில் ஆங்காங்கே வருடியது வாடைக்காற்று..... அது நீ சாதனை புரிந்த போது...! தமிழீழத்தில் திசை தெரியாது வீசியது கடும் புயற்காற்று..... அது நீ செல்லடித்து சாகும் போது...!
புயற்காற்றே நீ.......... எப்போது தென்றலாய் மாறுவாய்.............? தென்றலே நீ............ எப்போது எம் தேசத்தை தாளாட்டுவாய்....? தேசமே நீ............. எப்போது எம் தமிழினத்தை சீராட்டுவாய்...? பாராட்டுவாய்....? தாளாட்டுவாய்...?
0 கருத்துகள்:
கருத்துரையிடுக