உனைப் போல் ஒருவன்
இருந்தால் உலகம்
சதியில் இருந்து விடுபடும்.
எனைப் போல் பலரும்
இருந்தால் தேசம்
இருளில் இருந்து விடுபடும்.
பார்த்தாயா... எங்கள் மண்ணின் வாசம்.
கேட்டாயா... எங்கள் அழுகைச் சத்தம்
தினமும் நினைக்கிறோம் உன்னையே.
நீ...வந்தால் கிடைத்திடும் தமிழீழமே
ஆலைய மணியின் ஓசை
அங்கு கேற்பது கூட இல்லை.
செல் அடியின் ஓசை
அதனால் காதுகள் கேற்பது இல்லை.
ஆயிரம் ஆயிரம் வேங்கைகள்
மா...வீரர் ஆனது ஈழமண்ணில்.
ஆயிரம் ஆயிரம் உறவுகள்
சாம்பலாய்ப் போனது வன்னிமண்ணில்.
காட்டிக்கொடுக்கும் கூட்டம்...
புலிகள் பேரைக் கேட்டால் நடுக்கம்.
காலை மாலை தூக்கம் இல்லை...
கனவிலும் வருகிது கரும்புலித் தொல்லை.
மீன் பிடித்தொழிலும் இல்லை...
மீறிப் போனால் திரும்பி வருவதுமில்லை
காய்கறிக் கடையும் இல்லை...
கடைசியில் பிச்சை எடுக்கப் பாத்திரமுமில்லை.
ஈழமகள் உங்கள் அபிசேகா.
தமிழாசான் பதிவேடு விருது 2019
6 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக